நாத்தனாரின் மகளை வாஞ்சையுடன் பார்த்தாள் சிவரஞ்சனி.
அவள் வினோதினியின் விருப்பம் பற்றி அறிந்திருந்தாள்.
அதனால்தான் அவளை தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
உறவுக்குள் திருமணம் என்னும்போது பிள்ளைகளுக்கு தங்களுக்குப் பிறகும் உறவு நிலைத்திருக்கும் என்று நினைத்திருந்தாள்.
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துச் சென்றது வெறும் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கையின் நிதர்சனம்.
அதனால் இப்போது கடவுள் விட்ட வழி என்று தன் மனதை வெளிக்காட்டாமல் நடமாடினாள்.
அவளுக்கு வினோதினியின் செயலும் பிடித்திருந்தது. அவள் நினைத்திருந்தால் தனது பெற்றோரைக் கூட வரவிடாமல் செய்திருக்க முடியும்.
அப்படியில்லாது உரிமையாக சமையல் அறைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவருமே பட்டப்படிப்பை முடித்திருந்தனர்.
மனோரஞ்சனிக்கும் ஒரு மகள்.
ஒரு அண்ணனாய் அவன் பொறுப்புடன் பேசப்பேச பெரியவர்கள் மகிழ்ந்தனர்.
சரவணனுக்கு இரண்டு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்வது என்பது இயலாத ஒன்று. அவனுடைய வருமானத்தில் ஒரளவு சேர்த்து வைத்திருக்கிறான்தான்.