விருந்துக்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கிளம்பிவிட்டனர்.
மனோரஞ்சனி சிவரஞ்சனியிடம் வந்தாள்.
"அக்கா நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே."
"போடி." அவள் வெட்கப்பட்டாள்.
மனோரஞ்சனி இதை எல்லாம் பார்க்க அத்தான் இல்லாமல் போய்விட்டாரே என்று மனம் வருந்தினாள்.
கருப்பையா இறந்த போது அவள் இருந்த நிலையைப் பார்த்த போது அவளுக்கு என்னவாகுமோ என்று பயந்தாள் மனோரஞ்சனி. ஆனால் அக்கா சாதித்துவிட்டாள். அந்தப் பெருமிதம் இன்று முகத்தில் தெரிகிறது என்று மகிழ்ந்து போனாள்.
மகாலெட்சுமி மட்டும் வீட்டில் தங்கிவிட்டாள். விருந்து முடிந்த பிறகு நிறைய வேலை இருந்தது. அதனால் வினோதினிக்கு கூடமாட உதவி செய்துவிட்டு வருகிறேன் என்று ஆதித்யாவிடம் சொல்லிவிட்டாள்.
பேரனோடு சிவரஞ்சனி விளையாடிக்கொண்டிருக்க இருவரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
சிருந்தோம்? நான் எப்போதும் உன் கூடத்தானே இருந்தேன்."
"அதனால்தான் மாமா நான் இதை எல்லாம் செய்ய முடிந்தது. போதும் மாமா. எல்லாம் போதும். என் மனசு இப்ப ரொம்ப நிறைவா இருக்கு. நான் உங்ககிட்டயே வந்துடுறேன்."
கருப்பையா சிரித்தான்.
அவன் புகைப்படத்தை அணைத்துக் கொண்டே படுத்தாள்.