இருந்தாலும் ஒரே நேரத்தில் இரண்டு திருமணங்கள் நடக்க வேண்டும் என்றால் அதை தன்னால் சமாளிக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும்.
இப்போது மற்றவர்களின் பார்வை சரவணன்-மேனகா, மனோரஞ்சனி-கார்த்திக் தம்பதிகள் மீது பதிந்தது.
"என்னப்பா சொல்றீங்க? தங்கச்சிகளோட கல்யாணத்தை முடித்துவிட்டு தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று அவன் சொல்வதிலும் நியாயம் இருக்குதானே? என்னப்பா சரவணா? ஏதாவது வரன் பார்த்திருக்கீங்களா? ஏம்மா மனோரஞ்சனி, உங்க பொண்ணுக்கு ஏதாவது வரன் பார்த்திருக்கீங்களா?"
"வரன் வந்துக்கிட்டுத்தான் இருக்கு."
"அப்ப நல்ல வரனா பார்த்து முடிச்சிட வேண்டியதுதானே?"
"என்னால் ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம் பண்ண முடியாது."
சரவணன் தன் நிலைமையைச் சொன்னான்.
"அதைப் பத்தி நீங்க கவலைப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
இதுவும் ஒரு அதிசயம். அவர் அந்தந்த பகுதிக்கு ஏற்ற மாதிரிதான் உயிர்களைப் படைக்கிறார். இது தெரியாமல் சிகப்பா இருந்தால்தான் அழகுன்னு நாம கண்டதையும் பூசிக்கிறோம். உங்களுக்கு வினோவை எனக்கு கல்யாணம் பண்ணித்தர விருப்பம் இருக்கா இல்லையா?"
"நீ என் மாப்பிள்ளையாக வர நான் கொடுத்து வச்சிருக்கனும்."