“அண்ணி...இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்..அதுக்காக எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?? வேணும்னா எவ்வளவு பணம் வேணும்னு சொல்லுங்க...தர்ரேன்.. நானே உங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்... “ என்று அவன் முடிக்கும் முன்னே
“பார்த்திங்களா?? பார்த்திங்களா?? இவர் கிட்ட காசு பணம் இருக்குனு எப்படி பேசறார் பாருங்க... அத்தை... மாமா... நீங்களே சொல்லுங்க.. உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு.. நாளைக்கு அவளுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா அப்படியே விட்டுடுவீங்களா?? நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க... “ என்று பெரியவர்களை பார்த்தாள் முகத்தை சோகமாக வைத்து கொண்டு
அவர்களோ இன்னும் அtதிர்ச்சியில் இருந்து விலகாமல் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்து கொண்டு நின்றனர
...
This story is now available on Chillzee KiMo.
...
> எப்படிடா நீ போய் என் தங்கச்சிக்கு மகனா பொறந்தா?? உன்னை போய் தவமிருந்து பெத்தாளே அவளை சொல்லனும்..
உங்கப்பா உன் அம்மாவை தவிர வேற யாரையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.. அவருக்கு போய்...
இத எல்லாம் பார்க்க கூடாதுனு தான் முன்னாடியே போய் சேர்ந்துட்டாங்க போல...