“ஹ்ம்ம்ம் அது கூட நீ வேற எங்கயாவது போய் முன்னாடியே கெட்டு போயிருந்தனா கண்டு பிடிக்க முடியாது தான்... “ என்று பவித்ரா முடிக்கு முன்னெ
“போதும் நிறுத்து பவித்ரா.... நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல... நானும் நல்ல குடும்பத்துல பொறந்துவ தான்... ஏதோ நிஷாந்த மாமா மேல ஆசை பட்டதுல அவர் எப்படியாவது எனக்கு சொந்தமா ஆக்கிக்கணும்னு தான்.. இப்படி நடந்துகிட்டேன்... “ என்றாள் மெல்லிய குரலில்...
“சீ வாய மூடு.. அடுத்தவ புருசன் மேல ஆசைபடறது தப்புனு தெரியாது??... நீ ஆசைபட்டது அவர் மேல இல்ல... அவர் சொத்து மேல... உன் பேராசைக்கு எந்த தப்பும் பண்ணாத எங்கயும் தலை குனிந்து நிக்காத என் புருசனை தலை குனிய வச்சுட்டியே... “
இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சுருக்குமே என்ன நடந்ததுனு...
கட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பணத்துக்காக இப்படி ஒரு கீழ்தரமான காரியத்தை பண்ண எப்படி மனசு வந்தது??...
“சீ... உன்னை போய் நான் காதலிச்சேன் பார்.. இனி ஒரு நிமிடம் உன் தங்கச்சி இங்க இருக்க கூடாது.... சொல்லிட்டேன்.. “ என்று உறுமிவிட்டு வேகமாக வெளியேறினான்..
அதை கண்ட சரோஜாவுக்கு கிலி பரவியது...