(Reading time: 12 - 23 minutes)

“இல்லைடா வராது... எப்படி உள்ளார போகணும்ன்னு பக்காவா பிளான் போட்டுட்டேன்... அதை பிறகு பார்க்கலாம்... இப்போ முதல்ல மணி விஷயம் முடியட்டும்.....”

இருவரும் அங்கிருந்து கிளம்பி கொலை நடந்த இடத்தை அடைந்தார்கள்....

“காலேஜ்லேர்ந்து அந்த பொண்ணு இந்த வழியாத்தான் நடந்து வந்திருக்கு... இந்த இடத்துலதான் சரியா கொலை நடந்திருக்கு....”

இருவரும் கல்லூரியிலிருந்து கொலை நடந்த இடத்திற்கு ஆராய்ந்தபடியே நடந்து வந்தார்கள்... அங்கு அவர்களுக்கு பெரிதாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை...

“இப்போ என்ன பண்ணலாம் சக்தி.... இங்க புதுசா எந்த விஷயமும் மாட்டலை... ரொம்ப நாம ஆராயவும் முடியாது...”

“ஆமாம்டா சாரங்கன் சார் மணி கேஸ் எடுத்த பிறகு அந்த இன்ஸ்பெக்டர் கொஞ்சம் உஷாரா இருக்காரு.... நாம இங்க விசாரிச்சது எப்படியானும் அந்த ஆள் காதுல எட்டிச்சுன்னா கஷ்டமாகிடும்...”

“சக்தி இங்க நாம ரொம்ப துருவ வேண்டாம்... சாரங்கன் சார் விட்டு பார்க்க சொல்லலாம்... அவர் ஏற்கனவே இந்த கேஸ்ல இருக்காருன்னு அந்த இன்ஸ்பெக்டர்க்கு தெரியும்... அதனால புதுசா எந்த சந்தேகமும் வராது...”, சந்தோஷ் சொல்ல சக்தி அதை ஆமோதித்தான்...

அன்று இரவு சந்திக்கலாம் என்று கூறி இருவரும் பிரிந்தார்கள்... உள் நுழையப் போகும் இருவரும் ஒழுங்காக வெளியில் வருவார்களா....  

தொடரும்

Episode # 17

Episode # 19

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.