“இதுக்கு எதுக்கு ஒரு மணி நேரம் டா ஜீவி?”
“என்ன அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரில அரிசி எடுத்து சுத்தம் பண்ணி சாதம் தயார் பண்ணி லெமன் பிழிஞ்சி கடுகு தாளிச்சு சாதத்துல போட்டு கிளறி முடிக்குறதுக்குள்ள ஷப்பாபாபாபா..அதை விட முக்கியம் உப்பு புளிப்பு எல்லாம் சரியா இருக்கானு வேற பாத்துக்கணும்..”
“அடடா எவ்ளோ வேலை பாவம் தான் ஜீவிம்மா நீ”
“ம்ம் மாமா அதுகூட பரவால்ல என் திறமையை பாருங்க எல்லாத்தையும் அரைமணி நேரத்துல செஞ்சு முடிச்சுட்டேன்.இந்த புளிப்பை சரி பண்றதுக்குள்ள தான் கொஞ்சம் டைம் ஆய்டுச்சு..”
“அடடே அதை எப்படி டா சரி பண்ண?”
“அப்படி கேளுங்க அத்தை முதல்ல சாதம் போட்டு லெமன் பிழிஞ்சு எல்லாமே பண்ணிட்டேன் கொஞ்சம் புளிப்பு அதிகமாய்டுச்சு அப்பறம் கொஞ்சம் சாதம் போட்டேன் இப்போ சாதம் அதிகம் அப்பறம் லெமன் அப்பறம் சாதம் ஒருவழியா கரெக்ட் டேஸ்ட் கொண்டு வந்துட்டேன்.”
“அடிப்பாவி பொண்ணே என்றவாறே சமையலறைக்குள் வேகமாய் சென்று பார்த்தவர் ஒரு குக்கர் மொத்தமும் இருந்த எலுமிச்சை சாதத்தை கண்டு அதிர்ந்ந்துவிட்டார்.
“டேய் ஜெயந்த் இன்னும் ரெண்டு நாளைக்கு நம்ம வீட்ல மூணு வேளையும் சாப்பிடலாம் போல அவ்ளோ இருக்கு டா..”
“ஜீவிம்மா உன்னை கெஞ்சி கேக்குறேன் இதுக்கு மேல சமையல்கட்டுக்கு நீ சாப்டுறதுக்கு மட்டும் வா போதும்..நானே உனக்கு என் கையால சமைச்சு போடுறேன்.அந்த பாக்கியத்தை எனக்கு கொடுத்துரும்மா..”
“அத்தை இப்படி கலாய்ச்சுட்டீங்களே..உங்களுக்காக நா ஆசை ஆசையா பண்ணிணேன் தெரியுமா போங்க நா கோவமா போறேன்.”
“அச்சச்சோ இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா நா உனக்கு கத்துக் கொடுக்குறேன் எல்லாத்தையும்.சொல்லப் போனா நானெல்லாம் கல்யாணம் பண்ணி வந்தஅப்போ வெந்நீர் கூட போடத் தெரியாது.இதெல்லாம் சகஜம் தான் டா..”
“என்ன சொன்னாலும் சரி என்னை கிண்டல் பண்ணிணதுக்கு பனிஷ்மெண்ட் மூணுவேளையும் உங்க எல்லாருக்கும் லெமன் ரைஸ் தான் போங்க”என்றவாறு கல்லூரிக்குத் தயாரானாள்.
தொடரும்...