(Reading time: 19 - 38 minutes)

அதனாலேயே யாரும் என்கிட்ட உரிமையா பேச மாட்டாங்க.ஆனா நீ மட்டும் தான் என்கிட்ட தானாவே வந்து பேச ஆரம்பிச்ச.முதல்ல ஒரு மாதிரி கடுப்பா இருந்தாலும் போக போக உன் கல கல பேச்சு இல்லாம வாக்கிங் போர் அடிக்க ஆரம்பிச்சுருமோனு தோணிடுச்சு.

இப்பவும் நேத்து நடந்த விஷயத்தை கூட வேற கோணத்துல யோசிக்குற பக்குவம் வந்ததுக்கு காரணம் ஒரு வகைல நீயா கூட இருக்கலாம்னு தான் தோணுது.என் பொண்டாட்டிகிட்ட போய் இதை சொன்னா ஆச்சரியமா என்னை பார்ப்பா.எனக்கு ஒரு ப்ரெண்ட் அதுவும் இந்த வயசுலயானு.”

உங்களுக்கு ப்ரெண்ட்ஸே இல்லையா அங்கிள்?”

ம்ஹும்..காலேஜ் படிச்ச அப்போ ஒருத்தன் இருந்தான் அப்பறம் அவனோடயும் தொடர்பு இல்லாம போச்சு..அதுக்கப்பறம் எல்லாம் தனியாவே பழகிட்டேன்.”

ப்ரெண்ட்ஸ் இல்லாம இருக்க முடியுமா நீங்க சொல்றதை கேட்டாலே அதிர்ச்சியா இருக்கு எனக்கு.எனக்கெல்லாம் ப்ரெண்ட்ஸ் இல்லாத லைஃப் நினைச்சுகூட பார்க்க முடியாது.”

ம்ம்ம்

அட உங்களை இப்படியே எல்லாம் விட்றதா இல்ல..இனி நீங்களும் என் ப்ரெண்ட் என்னோட க்ளோஸ் ப்ரெண்டை இன்னைக்கு ஈவ்னிங் உங்களுக்கு அறிமுக படுத்துறேன் ஓகே வா?”

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ஏதோ உன்கிட்ட மனசுவிட்டு பேசணும்னு தோணிச்சு சொன்னேன்..வேற எதுவும் வேண்டாம்..”

அப்படியெல்லாம் உங்களை விட முடியாது..ஈவ்னிங் சரியா 5 மணிக்கு இங்க வந்துருங்க..பாய் அங்கிள்..”,என்றவன் உற்சாகமாய் துள்ளிச் சென்றான்.

காரில் அமர்ந்தவன் ஜீவிகாவிற்கு அழைத்தான்.அழைப்பு ஏற்கப்பட்ட அடுத்த நொடி,

ஜீஜீஜீஜீஜீஜீ!!!”

ஐயோ ஆத்வி நா ஜெயந்த்என் காதுகுள்ள ஒய்ய்ங்ங்ங் சத்தம் கேக்குது..என் பொண்டாட்டியை செவீடு ஆக்கணும் முடிவு பண்ணிட்டீயா?”

ஐயையோ மச்சான் சாரி சாரி..ஜினு நினைச்சுட்டேன்..அவ இல்லையா?”

மேடம் இப்போதான் எழுந்து காலேஜ்க்கு ரெடியாக போய்ருக்கா

..மச்சான் என் மாமனாரும் நானும் ப்ரெண்ட்ஸ் ஆய்ட்டோம் தெரியுமா?!”

ஒரு கையில் காபியை வைத்தவாறே பேசிக் கொண்டிருந்த ஜெயந்த் அவன் கூறியதை கேட்டு எழுந்த சிரிப்பில் காபி மூக்கிற்கு ஏறிவிட்டிருந்தது.தொண்டையை செருமியவாறே சத்தமாய் சிரித்தவன்,

கல்யாணம் பண்ணி குழந்தைகுட்டினு போக வேண்டிய வயசுல ப்ரெண்ட்ஸ் பிடிச்சுட்டு இருக்கியே ஆத்வி!!”

எல்லாம் என் தலையெழுத்து என்ன பண்றது மச்சான்..அவனவன் பிடிச்ச பொண்ணை பார்த்து ப்ரண்ட் ஆகி லவ் பண்ணி ரொமான்ஸ் பண்ணுவான்..நா என்னடானா பொண்ணோட அப்பாவுக்கே இவ்ளோ மெனக்கெட வேண்டியதா இருக்கு..”

ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல ஆத்வி..வாழ்க்கையில் இப்படிபட்ட போராட்டங்கள் எல்லாம் கோடில ஒருத்தருக்கு தான் வரும்..நீ கோடில ஒருத்தன் டா அப்போ..”

ம்ம் ஆமா ஆமா கண்டிப்பா ஷான் வீட்டோட தெரு கோடில நிக்குற ஒருத்தனா தான் இருப்பான்..ஆமாவானு கேளுங்க மாம்ஸ்..”

மச்சான் என் சார்பா அவ மண்டை மேலேயே ஒண்ணு போடுங்களேன்..”

காலங்காத்தலேயே வா ஆளை விடுங்க ரெண்டு பேரும்..போனை அவகிட்ட கொடுக்குறேன் நீயாச்சு இல்ல அவளாச்சு..பை..”,என்றவன் போனை அவள் கையில் திணித்துவிட்டு கன்னத்தில் இதழ்பதித்துச் சென்றான்.

சொல்றா ஆத்வி பையா இன்னைக்கு என்னாச்சு வாக்கிங்ல?”

ஜி நா செம ஹாப்பி மனுஷன் சென்டிமென்டலா பேசி தாக்கிட்டார்..எனக்கே கொஞ்சம் அவர் மேல பீல் ஆய்டுச்சுனா பாரேன்..”

பார்த்துடா ஓர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது..அப்பறம் நீ பாட்டுக்கு அவரை தான் கல்யாணம் பண்ணிப்பனு சொன்னா ஷான் அம்மா வாழ்க்கை என்னாகுறது?”

அடச்சை..ஏன் டீ இப்படி சரி சொல்ல வந்ததை கேளு இன்னைக்கு சாய்ந்திரம் அங்கிளை மீட் பண்ண போறோம் நீயும் வர்ற..”

உனக்கு ஷான்யாவை கல்யாணம் பண்ற ஐடியா இல்லையா டா..என் ஓட்டை வாயை வச்சுட்டு நா வேற சும்மா இல்லாம எதாவது சொல்ல உன் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் நீயும் வேணாம் உன் ப்ரெண்ட்ஷிப்பும் வேணாம்னு டிவோர்ஸ் பண்ணிட போறாரு…”

உன் வாய்ல வசம்ப வச்சு தேய்க்க..அதெல்லாம் ஒண்ணும் ஆகாது ஒழுங்கா அஞ்சு மணிக்கு வந்து சேரு..பை..”

எல்லாம் என் நேரம் வந்து தொலையுறேன்..பை..”,என்றவள் போனை வைத்துவிட்டு திரும்ப எத்தனிக்க பின்னிருந்து அவளை இறுக அணைத்துக் கொண்டான் ஜெயந்த்.

என்ன மாம்ஸ் காலங்காத்தாலேயே ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கே என்ன மேட்டரு??”

கட்டின பொண்டாட்டியோட ரொமான்ஸ் பண்ணக்கூட உரிமை காலம் நேரம்எல்லாம் வேணுமா ஜீவிகுட்டி?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.