“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு நான் தான் டி முழிக்குறேன்.நடுரோட்டுல நிக்குறோம் முதல்ல இங்கிருந்து கிளம்ப வழி சொல்லு அப்பறம் நாள் மொத்தமும் கூட அவனை போட்டு டின் கட்டு..”
ஆழ் மூச்செடுத்தவளாய் சற்றே நிதானித்து சிந்தித்தவள்,”ரேஷ் வீட்டுக்கு போய்டலாம்ங்க..அவர் வீட்டு காம்பவுண்ட்லயே இருக்குற அவுட் ஹவுஸ்ல தான் மெய்ட் தங்கியிருக்காங்க.நா அவர்ட்ட விஷயத்தை சொல்லிட்றேன்.நீங்க காரை எடுங்க.அப்படியே அங்கிள் ஆன்ட்டிகிட்ட அவன் ப்ரெண்ட்ஸ் பார்ட்டிக்கு போறான்னு சொல்லிட்றேன்..”
அவள் கூறுவதும் சரி தான் என்று உணர்ந்தவனாய் காரை கிளப்பி ரேஷ்வாவின் வீட்டிற்குச் சென்றான்.இவர்கள் அங்கு செல்வதற்குள் ரேஷ்வா பணிப்பெண்ணிடம் விஷயத்தை கூறியிருக்க ககதவைத் திறந்து இவர்களுக்காக தயாராய் காத்திருந்தார்.
அவரிடம் மேலாலோட்டமாய் விஷயத்தை கூறிவிட்டு விடைப்பெற்றவர்கள் ஆத்விக்கை காரிலிருந்து வெளியே இறக்கினர்.ஜெயந்த் தன் தோளின் மீது ஆத்விக்கின் கையை போட்டுக் கொள்ள மற்றொரு கையைப் பற்றி வெளியே இழுத்தாள் ஜீவிகா.
“ஜீ..நீ என்னன ப..ண்ண்..ற…ம..ச்ச்சா..ன்ன் மே..ல..அக்..க..றை..யே..இ…ல்…ல”
“வேணாம் டா கொலை வெறில இருக்கேன் சாவடிச்சுருவேன்..மூடிட்டு உள்ள வா..”
“ம..ச்ச்..சா..ன்ன்..”
“மச்சான் மேல ரொம்ப அக்கறை நல்லா வாய்ல வந்துரும்…பேசாம போடா எரும..”
கீழிருந்த அறையிலேயே அவனை படுக்க வைத்துவிட்டு இருவருமாய் வந்து ஹால் சோபாவில் அமர்ந்தனர்.
“பாவம் ஜீவி..எப்படி சந்தோஷமா இருப்பான்..இப்படி பார்க்கவே என்னவோ போல இருக்கு..”
“ம்ம் எல்லாம் காதல் படுத்தும் பாடு..அங்கிள் வேற எப்படியிருக்காரோ தெரிலங்க..அந்த டென்ஷனே பெருசா இருக்கு இதுல இவன் வேற…இதெல்லாம் பண்றதால எல்லாம் மாறிடப் போகுதா..ஆனா ஆத்வி இத்தனை லைட் ஹார்ட்டரா இருப்பான்னு நினைக்கவே இல்ல..எல்லாம் சீக்கிரமே சரி ஆகணும்னு வேண்டிக்குறேன்..”,என்றவளை ஆதரவாய் தோள் சாய்த்துக் கொண்டான் ஜெயந்த்.
தொடரும்...