மேலும் பாறையின் ஒரு பக்கம் ஏறினால், மறு பக்கம் ஏரியில் முடியும். போட்டிங் இருக்கவே, எல்லோரும் சேர்ந்து படகில் சென்றார்கள்.
ப்ரித்விராஜ் மற்றும் கிருத்திகா இருவரும் வெகு ஜாக்கிரதையாகவே இருந்தார்கள். காலை தனியாகப் பேசிக் கொண்டு இருக்கும்போது , ப்ரித்வி சற்று அழுத்திச் சொல்லிருந்தான். பிரெண்ட்ஸ் விட்டுவிட்டுத் தனியாக சுற்றக் கூடாது என்றான். சும்மாவே நம்ம கிருத்திகாவிற்கு அட்வைஸ் என்றால் தூக்கம் சொக்கும் . அதில் அவன் பாதுகாப்புப் பற்றிப் பாடமே எடுக்கவே, தன்னை மீறி ஒரு கொட்டாவி வெளியிட்டாள்.
அதைக் கண்டு தான் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் செல்லவும், கிருத்திகா அவனைப் பார்த்து நாக்கைத் துருத்தினாள். சட்டென்று அவளைப் ப்ரித்வி திரும்பிப் பார்க்க, கிருத்திகா அசடு வழியச் சிரித்தாள்.
தொடரும்!