“...”
“இல்லை சார், நீங்க சொல்றதும் ஒரு விதத்தில் சரிதான். தெரிஞ்ச இடத்தில் என்றால் சமாளிக்கிறது ஈசியா இருக்கும். பட் நாம தேடுறவங்க நேரடியா ஈடுபட்டால் நீங்க சொல்றது சரி. ஆனால் அவங்க இங்கே உள்ள லோக்கல் ஆட்களை யூஸ் செய்யும் போது, அதைப் பற்றி லோக்கல் போலீஸ்குத் தான் ஐடியா இருக்கும்”
“...”
“சரி சார், நீங்க சொன்ன மாதிரி நீங்க நம்ம இன்ஸ்பெக்டர் கிட்டே கேட்டுச் சொல்லுங்க. யார் மூலமாவது இங்கே லோக்கல் ஹையர் ஆபீசர் கிட்டப் பேசலாம்”
“...”
“ஓகே சார். நான் பார்த்துக்கறேன் நீங்க கவலைபடாதீங்க” என்று பேசி வைத்தான்.
அவன் பேசி முடிக்கும் வரைப் பார்த்துக் கொண்டு இருந்தக் கிருத்திகா,
“சார், நீங்க யார்? உங்களைப் பார்த்தா வெறும் டூரிஸ்ட் கைட் மாதிரித் தெரியலையே?” என்றுக் கேட்டாள்.
“ஹேய். நம்பும்மா. நான் டூர் மானேஜர் தான். இல்லைன்னா எப்படி உங்க காலேஜ்ஜில் அலோவ் பண்ணுவாங்க.”
“மே பி. நீங்க வெறும் டூர் மேனேஜரா மட்டும் இருக்க முடியாது. உங்க ப்ளன்னிங் , செயல் படுதற விதம் எல்லாம் பார்த்தா நீங்க போலீஸ் மாதிரி தோணுது.”
“ஹ. போலீஸ் இல்லை. பட் செக்யுரிட்டி கம் டிடெக்டிவ்வும் நான் பண்றேன். அவங்களுக்கு நிறைய கேஸ்லே ஹெல்ப் பண்ணி இருக்கிறேன். எங்களுக்குள்ளே நல்ல அண்டேர்ஸ்டண்டிங் இருக்கிறதால் அங்கே ஓரளவு செல்வாக்கு எனக்கு இருக்கு” என்று கூறவும், கேட்டவளுக்கு திறந்த வாய் மூட முடியவில்லை.
அவளின் ரியாக்ஷன் பார்த்து ப்ரித்வி சிரிக்கவும், தன்னுணர்வு வந்தவள்,
“இப்போ யாருகிட்டேப் பேசினீங்க?’ என்றுக் கேட்டாள்
“உன் பெரியப்பாவிடம் தான்” எனவும், அப்போது வராத மயக்கம் இப்போ வரும்போல் இருந்தது.
அவள் நிலைப் பார்த்து “ஹேய் என்னாச்சு?” என்ற ப்ரித்விக்கு
“நான் இதுவரைக்கும் எதுவுமே வீட்டில் சொல்லலை. நீங்க என்னடான்னா இந்த நிமிஷம் வரைக்கும் சொல்லிருக்கீங்க. எனக்கு நல்லா மண்டகப்ப் படி வாங்கிக் கொடுப்பீங்க போலே இருக்கே” என்றாள்.
“அடுத்த நியூஸ் சொன்னா நீ ஷாக் ஆகிடுவ?”
“என்ன அது?”
“என்னை உனக்குப் பாடிகார்டா பிக்ஸ் பண்ணிருக்காங்க உன் பெரியப்பா”
“ஐயோ.. “ என,
“எஸ். ஆனால் வெளியில் தெரியக் கூடாதுன்னு சொன்னாங்க. சோ இந்த டூர் மேனேஜர் கம் பாடிகார்ட்டா நான் இருக்கேன்”
ப்ரித்வி பேசியதைக் கேட்ட கிருத்திகாவிற்கு என்ன சொல்ல என்றுத் தெரியவில்லை.
தொடரும்!