பேருந்து விபத்திலிருந்து பயணிகளை தன்னுயிரையும் மதிக்காமல் காப்பாற்றியதால் மன்வீர்க்கு இந்திய அரசு இந்த விருதை வழங்க இருக்கிறது. எப்படியோ அந்த கடவுள் உன்னை காப்பாத்திட்டாரு இனிமேல் நீ என்ன செஞ்சாலும் கொஞ்சம் கவனமா இரு இது என்னோட தனிப்பட்ட வேண்டுகோள் என்றார் மிஸ்ரா. தேங்க் யூ சார், என் மேல இவ்வளவு அக்கறை காட்டுறதுக்கு என்று உரத்த குரலில் சொல்லி சல்யூட் அடித்தான் மன்வீர். அப்புறம் மன்வீர் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும் அதை எப்படி சொல்றதுன்னு தெரியல என இழுத்தார் மிஸ்ரா எதுவாக இருந்தாலும் சொல்லுங்க சார் உங்களுக்காக நான் எதுவும் செய்வேன் என்றான் மன்வீர். என்னோட நெருங்கிய நண்பர் ஒருத்தர் என்கிட்ட ஒரு உதவி கேட்டிருக்காரு நல்ல திறமையான தைரியமான பாடிகார்ட் உடனே வேணுமா அவருக்கு என்றார் மிஸ்ரா. அவருக்கு பாடிகார்டா போறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை சார் என்றான் மன்வீர். அது தெரியும் மன்வீர் பட் அவர் பாடிகார்ட் கேட்டது அவருக்கில்லை தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சாராவிற்கு என்றார்.
சாராவா? எங்கேயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கு சார்,செலெபரிட்டிக்கு கிடைக்காத பாடிகார்டா எதுக்கு இவ்வளவு அவசரமா என்னை போக சொல்றீங்க? செலெபரிட்டிக்கு வேலை செய்ய நிறைய பேர் போட்டி போட்டுக் கொண்டு கியூவில் நிற்பாங்களே சார் என்றான். அதைத்தான் நானும் கேட்டேன் மன்வீர் ஆனா அவங்களுக்கு கொஞ்ச நாளாகவே ஏதோ கொலை மிரட்டல்கள் வருதாம் அவங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாதனால வெல் ட்ரைன்டடு பாடிகார்ட் வேணும்னு என்கிட்ட ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டாங்க அதுனாலதான் உன்னை நான் ப்ரீபெர் பண்ணேன் என்றார் மிஸ்ரா. ஓகே சார்.. நான் எப்ப கிளம்பனும்னு மட்டும் சொல்லுங்க என்னால முடிஞ்ச வரைக்கும் அவங்கள பாதுகாப்பா பாத்துப்பேன் எனக்கூறிய மன்வீரை பார்த்து “தட்ஸ் மை பாய்” என்று ஆனந்தத்துடன் கூறினார் மிஸ்ரா. இன்னொரு முக்கியமான விஷயம் மன்வீர் சாராவிற்கு கொலை மிரட்டல் வந்த விஷயத்தை பத்தியும் அதுக்காக தான் நீ அங்க போயிருக்க என்ற விஷயத்தையும் யார்கிட்டயும் சொல்லாத அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் சேஃப் என்றார் மிஸ்ரா. உங்க ஆர்டர நான் மீற மாட்டேன் சார் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க ஐ வில் டு மை பெஸ்ட் என்று சொல்லி சல்யூட் அடித்துவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினான் மன்வீர்.
அதிரடி தொடரும்...