எல்லாம் சரியா எடுக்கணும். அப்புறம் தானே வெட்டி தைக்க முடியும்” வானதி ஸ்பீக்கரில் பேசிக் கொண்டிருக்க மொத்தக் குடும்பமும் கேட்டுக் கொண்டிருந்தது.
“அது போல தானக்கா. ஒவ்வொரு கடலுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கு. முதலில் கடலின் உயிரோட்டத்தை தெரிஞ்சுக்கணும். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் தன்மை, காற்றின் திசை, வானிலை எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிந்து கொண்டா எந்தக் கவலையும் இல்லாம கடலுக்குள் அமிழ்ந்து போகலாம்” தேன்மொழி கூற குடும்பத்தினர் அனைவரும் ஆச்சரியம் கொண்டனர்.
தங்களுக்கு எப்போதும் அவள் சிறு குழந்தை தான் என்ற போதும் கடல் குறித்த அவளது அறிவு அபாரமானது என்பதை புரிந்து கொண்டனர்.
ஆனாலும் ஓர் சூழ்நிலை வரும். தான் அறிவுப்பூர்வமாக தெரிந்து தெளிந்து கொண்டது எல்லாம் பயனற்று அங்கு உணர்வு மட்டுமே தலைதூக்கி நிற்கும் என்பதை தேன்மொழி அப்போது அறிந்திருக்கவில்லை.
ஆறு மாதங்கள் கடந்திருந்தன.
ஆதி தேன்மொழி பயிற்றுவித்த தேன்தமிழில் தேர்ச்சிப் பெற்றிருந்தான். குழந்தையில் இருந்தே கடலில் தவழ்ந்தவன் என்பதால் கடலை அறிந்து கொள்ள அவனுக்கு அதிக காலம் பிடிக்கவில்லை.
தேன்மொழி அவனுக்கு அறிவியல் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தாள்.
இனி தனியாக கடலில் பயணிக்க தான் தயார் என்று அவள் முடிவு செய்ய அவளுக்கு சொந்தமாக அதிநவீன படகு ஒன்றை பரிசளித்தார் அவள் செல்லத் தந்தை.
குடும்பத்தினர் அனைவரும் மாஹி வந்திருந்தனர்.
“படகுக்கு என்ன பேர் வைக்கலாம்” அனைவரிடமும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தாள்.
“கடல் புறா” குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
ஆதி தான் அந்தப் பெயரைச் சொல்லியிருந்தான்.
“கடல் புறான்னு ஒரு கதையில் புறா போல கப்பல் வரும்னு அக்கா சொன்னாங்க” ஆதி விளக்கம் கொடுத்தான்.
அனைவர்க்கும் அப்பெயரே பொருத்தமாக தோன்ற கடல் புறா தனது முதல் பயணத்தை இந்து மகா சமுத்திரத்தில் தொடங்கினாள்.
தொடரும்
Go to Senthamizh thenmozhiyaal story main page
{kunena_discuss:1218}