அங்காடிகள், மருத்துவமனை, அழகு சாதன பொருட்கள், பேஷன் ஆடைகள் விற்கும் கடைகள் போன்ற பெரு நிறுவனங்களை தென்னிந்தியாவில் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரதி வேற யாரும் இல்லை சாராவின் தாய்தான். ரதியின் இரண்டாவது கணவர்தான் திவான் குரூப்பின் தலைவரான தேவேஸ்வர் ஆகும்.
” குட் மார்னிங் மேடம் “……என்று சொல்லி வேலை செய்யும் பணியாளர்கள் அவளை வரவேற்கின்றனர் ரதி தனது கேபினில் அமர்ந்துகொண்டு கடந்த மாதத்தின் விற்பனை, லாபம், மற்றும் நஷ்டம் நிலவரத்தை கொண்ட ரிப்போர்ட்டை ஆய்வு செய்து கொண்டிருந்தாள். மேடம்… ஒரு சின்ன விஷயம் மாலுக்கு வரும் வாடிக்கையாளர்களாம் இத கேக்குறாங்க என ரதியின் துணை செயலாளர் மெதுவாக ரதியிடம் தயங்கி கூறினாள். என்ன விஷயம் ? சொல்லு என்ற ரதியிடம் மேடம் பார்க்கிங் கட்டணமெலாம் அதிகமா இருக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கட்டணம் ரொம்ப அதிக படுத்துறாங்கனும் அதை குறைச்சா நல்லா இருக்கோம்னு சொல்ராங்க என அவள் இழுக்க நோ வே…… நான் என்ன பெட்டிக்கடையா வெச்சிருக்கேன் இதை குறைக்க, நான் பெரிய ஷாப்பிங் மால் நடத்துறன் கீப் இட் இன் மைண்ட் அவங்கள வேணும்னா வண்டியை ரோட்ல விட சொல்லு” ஐ டோன்ட் கேர் “ பிசினஸ்னு வந்துட்டா இதெல்லாம் பாக்கக்கூடாது புரிஞ்சுதா நான் இன்னும் எப்படி ப்ரோபிட்ட இன்கிரீஸ் பண்லாமுன்னு பாக்குறேன் நீ என்னன்னா குறைக்க சொல்ற என்று கூர்மையான கத்தியைப் போல ஷார்ப்பாக பேசினால் ரதி.
ஊ… ஊ… நாம வந்துட்டோம் மன்வீர் இதுதான் நம்ம சாரா தங்கியிருக்க இடம் என்று விக்கி குஷியாக பேசிக்கொண்டே காரை சாராவின் வீட்டின் முன் நிறுத்தினான். ஸ்டார் வீடு என்றாலே பொதுவாக பெரிதாக தனிமையான ஆடம்பரமாக வீடாக இருக்கும் ஆனால் சாராவோ ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டில் ஒரு பகுதியில் வசித்து வருகிறாள். மன்வீர் என்ன பாக்குற ? என்னடா பெரிய வீட்டில இல்லாம அப்பார்ட்மெண்டில் இருக்காங்கனா அதான் நம்ம சாரா நம்ம சாராக்கு செலெபரிட்டி திமிரெலாம் இல்ல ரொம்ப சிம்பிளான பொண்ணு என்று விக்கி கூறினான். ஆனால் இது உண்மையல்ல சிறுவயதிலிருந்தே சாராவிற்கும் அவளது அம்மாவிற்கும் கருத்து வேறுபாடு அந்த காரணத்தினால் தான் அவள் தனியாக வசிக்கிறாள் அதுமட்டுமில்லாமல் அவள் தனிமையை தவிர்ப்பதற்காக ஆட்கள் பலர் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் குடியிருக்கிறாள். பத்து மாடி கொண்ட மிக விலை உயர்ந்த அப்பார்ட்மெண்டில் இருவரும் லிஃப்டின் மூலம் ஏழாவது மாடியை அடைந்தனர்.
சீசர்..........என்ற அலறல் சத்தம் அதை கேட்டவுடன் மன்வீரும் விக்கியும் குடுகுடுவென ஓடி சாராவின் வீட்டிற்குள் நுழைந்தனர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்து கிடக்கும் தன் நாய்