(Reading time: 12 - 23 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

இரவெல்லாம் தூங்காமல் விழித்து செந்தமிழின் வரை எதிர்நோக்கினாள்.

இரு தினங்கள் அந்தத் தீவில் கழிந்தன.

செந்தமிழைக் காணாமல் ஏமாற்றம் அடைந்தவள் அல்டாப்ரா சென்று அங்கிருந்து மாஹே பயணிக்க சித்தமானாள்.

அவள் ஏமாற்றம் கண்டு மேற்கொண்டு ஏதும் பேசாமல் தாத்தா ஆதி இருவரும் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதே நேரம் சென்னையில் தேன்மொழி வீட்டில் மிகுந்த உற்சாக பரபரப்பு காணப்பட்டது.

சர்வதேச மரைன் போட்டோகிராபி போட்டியில் தேன்மொழி முதல் பரிசை வென்றிருந்தாள்.

போட்டியை அதன் வெப்சைட்டில் வானதி தொடர்ந்து கொண்டிருந்ததால் தேன்மொழி வெற்றி பெற்றதை முதலில் அறிந்து கொண்டாள்.

முத்துக்குமரன் தங்கள் யூனிட்டில் பணிபுரிந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

பிரபல திரைப்பட நிறுவனர் முத்துக்குமரன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் கயல்விழியின் மகள் பெற்ற பரிசு விரைவில் செய்தியாக நாடெங்கும் பரவியது.

அதே சமயம் சர்வதேச செய்தி நிறுவனங்களும் தேன்மொழியின் வெற்றியை ஒளிபரப்பின.

உலகமே அவளின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் மிகுந்த ஏமாற்றத்துடன் தென்பட்டாள் தேன்மொழி.

அதிகாலை கதிரவன் கடல் அலைகளை தீண்டித் தழுவ ஆதி கடல் புறாவை தயார் செய்தான்.

மீண்டும் ஒரு முறை அப்பாறையில் ஏறி நின்றவள் கடலை ஏக்கமாகப் பார்த்தாள்.

“செந்தமிழ், என் மேலே கோபமா. நான் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போனதாலா. இல்லை என்னை மறந்து போயிட்டியா. உனக்கு ஒரே ஒரு முறை தாங்க்ஸ் சொல்லணும்னு ஆசைப்படறேன்” பாறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தவள் மெல்லியக் குரலில் ஆரம்பித்து உரக்கவே பாடினாள்.

“இவள் செந்தமிழ் தேன்மொழியாள்” மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருந்தவளை சமாதானம் செய்தது கடல்புறாவில் ஏற்றினர் ஆதியும் தாத்தாவும்.

அலைகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு கடல் புறா கடலில் மிதக்கலானாள்.

இப்போது நன்றாக விடிந்திருந்தது.

அந்தத் தீவு மெல்ல மெல்ல கண்பார்வையில் இருந்து மறைந்து கொண்டிருக்க விழிகளில் நீர் ததும்பி நிற்க தேன்மொழி கடலை வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவள் கண்ணில் நீர் படலம் அவள் பார்வையை சற்றே மங்கச் செய்த போதும் அவளின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.