(Reading time: 12 - 23 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

“தன்னைத் தேடி அன்று மாலை தீவை நோக்கி வந்து கொண்டிருந்தானே. அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் நன்றி கூறாமல் கிளம்பி வந்து விட்டேனே” என்று மருகினாள்.

அதற்கு மேல் தாத்தாவிடம் எதையும் மறைக்க விரும்பாத ஆதி செந்தமிழைப் பற்றி அனைத்தையும் அவரிடம் கூறினான்.

“செந்தமிழோட படம் அக்கா கிட்ட இருக்கு தாத்தா. செக்கச்சிவந்த நிறத்தில் இருக்கும் ஆமை அது” என்றான்.

“அந்த ஆமையை எங்கே போய் தேடுவது” தாத்தா ஆதியிடம் கேட்டார்.

“அந்தத் தீவிற்கு போக அக்கா விருப்பப்படுது” ஆதி மெல்ல தாத்தாவின் காதில் கூறினான்.

“அவ்வளவு தூரம் போய்விட்டு வர நிறைய நாட்கள் ஆகுமே” தாத்தா யோசித்தார்.

“மடகாஸ்கர் செல்லும் கப்பலில் போனால் வழியில் நம்ம கடல்புறாவை கடலில் விட்டு நாம தீவை நோக்கிப் பயணிக்கலாம் தாத்தா” ஆதி சரியான ஆலோசனை கூறினான்.

அதன்படி மடகாஸ்கர் செல்லும் சரக்கு கப்பல் ஒன்றில் கடல்புறாவை ஏற்றி தேன்மொழி, ஆதி, தாத்தா மூவரும் பயணம் செய்யலானார்கள்.

ஆதி மடகாஸ்கரை சேர்ந்தவன் என்பதால் அந்தச் சரக்குக் கப்பல் ஊழியளர்கள் பெரும்பாலோனோர் அவனுக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர்.

பல நாள் பிரயாணத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு மூவரும் கடலில் பயணித்தனர்.

நடுக்கடலில் கடல் புறாவை இறக்கிவிட்டு அங்கிருந்து தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

மீட்புக் குழுவினரோடு ஆதியும் உடன் வந்ததால் அந்தத் தீவின் பூமத்திய ரேகைகளை அவன் அறிந்திருந்தான். அதனால் வெகு விரைவாகவே அந்தத் தீவை சென்று அடைந்தனர்.

மாலை நெருங்கும் வேளையில் தீவை அடைந்தனர்.

தாத்தா அந்தத் தீவை கண்டு மிரட்சிக் கொண்டார். இரண்டு நாட்கள் இந்த ஆளில்லா தீவில் தன் பேத்தி தனியாக இருந்திருக்கிறாள் என்ற நினைவே அவருக்கு அச்சத்தைக் கொடுத்தது.

ஆதி படகில் இருந்த பொருட்களை எல்லாம் கரைக்கு எடுத்து வந்து கூடாரம் அமைத்தான்.

சூரியன் மேற்கே மெல்ல மறையத் தொடங்க பாறை மீது ஏறி நின்று கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

சூரியன் மறைந்து வானில் நட்சத்திரங்கள் தோன்றிய போதிலும் அவள் அலை மேல் விழி வைத்ததை விலக்கவில்லை.

“பாப்பா வாம்மா வந்து சாப்பிடு” தாத்தா வற்புறுத்தவே பெரியவருக்காக சாப்பிட்டவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.