(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“ஏன் இப்படி முழிக்கிற?

“இல்லை. திடீர்ன்னு ஏன் கேக்கறீங்க?”

“ஹ, ஹ, நானும் அதைத் தான் நினைச்சுட்டு இருந்தேன். அதான் கேட்டேன்”

உஸ்.. நல்ல வேளை. அவர் சாதாரணமாத் தான் கேட்ருக்கார். இல்லாட்டா நாமலே வாயைக் கொடுத்து வான்டட்டா சிக்கிருப்போம் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவள் நினைவு எல்லாம் அது எப்படி இந்தப் ப்ரித்வியும், அந்த இளவரசரும் ஒரே மாதிரி இருக்காங்க. என்ன சம்பந்தம் இருக்கும்ன்னு தன்னோட மூளையை ஷெர்லாக் ஹோம் ரேஞ்சுக்கு குடைஞ்சுகிட்டு இருந்தா. அதோட அந்த இளவரசன் சான்ஸ் கிடைச்சவுடன் கேப்லே ரொமான்ஸ் வேறே பண்ணிட்டு இருந்தாரே. இந்த பிரின்சும் அப்படித்தானோ என்ற சிந்தனை. அது மட்டும் நம்ம ஆளுக்குத் தெரிஞ்சுது, கிருத்தி நீ காலி என்று தன் மனசாட்சியை அடக்கிவைத்தாள்.

அவளின் முகம் காட்டும் ரியாக்ஷன் பார்த்த ப்ரித்வி, இவ நம்மள வச்சு என்னமோ படம் ஓட்டிட்டு இருந்து இருக்கா போலே இருக்கு. ப்ரித்வி சிக்கிறாதடா என்று அவனும் தனக்குள் படம் ஒட்டிக் கொண்டு இருந்தான்.

சற்றுச் சுதாரித்தப் பின் ப்ரித்வி,

“என்ன ஆச்சு? நேற்றுக் கனவில் என்ன நடந்தது?” என்றுக் கேட்டான்.

கிருத்தியும் கடைசி சீன் தவிர மற்ற எல்லாம் சொல்லி முடிக்கவும், பரிதவிக்குச் சற்று நேரம் வெகு ஆச்சர்யமே.

அவனின் பாவனைகள் பார்த்து,

“என்ன ஆச்சுப் பிரின்ஸ்?” என்றுக் கேட்டாள் கிருத்தி.

“சுபெர்ப். என்ன அழகான பிளான். என்ன ஒரு எக்சிகுயுஷன் .. சான்ஸ் லெஸ். ரொம்ப ஆசையா இருக்கு. நானும் அந்த பீரியட்லே இருந்து இருக்கலாமே”

“ஹ.. ஹ. யாருக்குத் தெரியும்? நீங்களே தான் அந்த இளவரசரோ என்னவோ?”

“அப்போ அந்த ராணி யாரு? நீயா?” என்றுக் கேட்கவும் திகைத்தாள் கிருத்திகா.

அவன் கேட்டது எதார்த்தம் தான் என்று தெரியும் கிருத்திக்கு. ஆனால் கனவில் இளவரசரும், ராணியும் விரும்புவது , கடைசியில் இருவரும் நடந்து கொண்ட முறை எல்லாம் எண்ணியவள், அந்த இடத்தில் தானா என்ற கற்பனையில் திடுக்கிட்டாள்.

ஒரு மாதிரி கிருத்திகாவிற்கு வேர்த்து வரவும், ப்ரித்வி சட்டென்று

“ஹேய்.. கிருத்தி என்ன ஆச்சு? இது ஜஸ்ட் வேடிக்கை தான். நாம் அடுத்த வேலையைப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.