தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 02 - சித்ரா. வெ
கார்த்திகேயனின் அன்னை வழி உறவினர்கள் அதிகம்பேர் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தனர். அவர்களில் சிலர் இன்னும் இங்கு வீட்டில் தான் தங்கியிருக்க, அதில் கார்த்திகேயனுக்கு தங்கை முறை உள்ள ஒரு பெண் தான் நித்யாவிற்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள். அந்த பெண்ணோ, இன்று அவர்களின் முதலிரவு குறித்து பேசி நித்யாவை கேலி செய்துக் கொண்டிருக்க, உடன் இருந்த சில பெண்கள் அதற்கு சிரித்துக் கொண்டிருந்தனர்.
"ஒரு புடவைக்கட்டி தலைப்பின்னுவதை நாமளே செஞ்சுக்க மாட்டோமா? எதுக்கு இதெல்லாம் இவங்க செய்றாங்க.." என்று நினைத்துக் கொண்டு பிடிக்காமல் கடமையே என்று நித்யா அங்கு அமர்ந்திருந்தாள்.
ஆணுக்கும் பெண்ணுக்குமான கூடல் குறித்து அவளின் சில தோழிகள் வெளிப்படையாகவே சிலதை பேசும்போது அதையெல்லாம் நித்யா காதுக்கொடுத்து கேட்டால் கூட, அதில் கலந்துக் கொள்ள மாட்டாள். விலகியே இருப்பாள். ஆனால் இப்போது அவளுக்கு அலங்காரம் செய்துக் கொண்டு அவளுக்கு நடக்க வேண்டிய முதலிரவு குறித்து மட்டுமல்லாமல், அவர்கள் முதலிரவை பற்றியெல்லாம் கூடியிருந்தவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு மிகவுமே சங்கடமாக இருந்தது. ஆனால் அவர்களெல்லாம் கார்த்திகேயனின் உறவினர்கள் என்பதால் அமைதியாக இருந்தாள். இல்லையென்றால் மட்டும் என்னவாம்? அப்போதும் வெளிப்படையாக எதுவும் பேசாமல் மனதிற்குள் தானே பேசிக் கொள்வாள்.
ஒருவழியாக அலங்காரத்தை முடித்து அவள் கையில் பால் சொம்பை கொடுத்து பெரியவர்களிடம் ஆசி வாங்க சொல்ல, "அப்பா எப்படியோ விட்டாங்களே.." என்று நினைத்தப்படி, அவளின் அன்னை, மாமா, பாட்டி மூவரிடமும் ஆசி வாங்கிய பின் அவளை கார்த்திகேயனின் அறைக்கு கூட்டிச் செல்லவும், மீண்டும் அவளின் உடலில் படப்படப்பை உணர்ந்தாள்.
ஒரு வருடமாக ஒரே வீட்டில் இருந்தாலும் கார்த்திக்கின் முகம் பார்த்து பேசியதே எண்ணி சில முறைகள் தான், அப்படியிருக்க அவனோடு ஒரே அறையில் எப்படி? அதுவும் அவன் மனைவியாக, கார்த்திக் வேறு அவளை விரும்பியா மணந்தான். பாட்டி சொன்னதற்காக தானே அவளை திருமணம் செய்துக் கொண்டான். அதனால் தனியறையில் அவளிடம் எப்படி நடந்துக் கொள்வானோ? என்ற சிந்தனையெல்லாம் அந்த அறைக்குள் செல்வதற்குள் அவளுக்கு தோன்றியது.
பின் கார்த்திக்கின் தங்கை உறவு முறை கொண்ட பெண் அந்த இடத்திலும் ஏதோ கேலி பேசி அவளை உள்ளே அனுப்ப, முகத்தில் முத்து முத்தாக வேர்வை துளிகளோடு அவள் உள்ளே