அவசியமில்லை தான், ஆனால் அதை பார்த்து அன்னை ஏதாவது கேள்விகள் கேட்பார் என்பதை உணர்ந்து, தலை குளித்துவிட்டு வெளியே வந்தவள், கீழே இறங்கிச் சென்றாள்.
தலையில் கட்டிய துணியோடு புடவையில் மகள் மாடியிலிருந்து இறங்கி வரும் அழகை பார்த்து வஞ்சி ரசித்தப்படி நின்றிருந்தார். அவள் இறங்கி வந்ததும், "நேத்து எல்லாம் நல்லப்படியா தானே நடந்துச்சு.." என்று அவர் கேட்க, அவள் ஆம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.
"சரி பூஜை ரூமை சுத்தம் செஞ்சு வச்சிட்டேன்.. நீ போய் விளக்கேத்து, நான் உனக்கு காஃபி போட்டு கொண்டு வரேன்.. குடிச்சிட்டு தலையை காய வை.. காலை டிஃபன் வேலையை நானே பார்த்துக்கிறேன்.." என்று அவர் சொல்ல, சரி என்று தலையை ஆட்டிக் கொண்டாள்.
அவள் பூஜையை முடித்து வந்ததும் வஞ்சி கொடுத்த காஃபியை பருகினாள். வஞ்சியையும் அவளையும் தவிர, அந்த வீட்டில் இன்னும் யாரும் எழுந்திரிக்கவில்லை, வந்த விருந்தினர்கள் வேறு எப்போது செல்வார்கள் என்பது தெரியாததால், இன்று அதிக வேலைகள் இருக்கும், அன்னையால் தனியாக அனைத்தையும் பார்த்துக் கொள்ள முடியாது,
வந்தவர்களும் இப்படி ஏதாவது விசேஷத்திற்கு என்று வருவதால், அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று பாட்டி கூறியிருந்தார். அதனால் வஞ்சிக்கு உதவ வேண்டுமென முடிவு செய்து மீண்டும் தனதறைக்கு வந்தவள், தலையை பிரித்து அந்த துணியால் தலையை துவட்டியப்படி ஜன்னல்புறம் இருந்த தோட்டத்தைப் பார்த்தாள்.
இங்கிருந்து பார்க்க அந்த தோட்டம் அழகாக தெரிந்தது. அவளுக்கு கொடுக்கப்பட்ட அறையில் இப்படி இருக்காது. எத்தனையோ முறை தோட்டத்தில் நின்று அழகை ரசித்திருந்தாலும், இப்படி தூரத்தில் இருந்தப்படியே முழுத் தோட்டத்தையும் மொத்தமாக பார்க்கும் போது அழகாக இருந்தது. அதனால் கீழே செல்ல வேண்டுமென்பதையும் மறந்து தலை துவட்டுவதை கூட விட்டுவிட்டு தோட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவளை திடீரென கார்த்திக் பின்னால் வந்து அணைத்தான்.
அவன் வந்து அணைப்பான் என்பதை எதிர்பார்க்காததால் முதலில் அவள் பயப்பட, அவள் உடல்மொழியை அறிந்தவன், "நித்தி நான் தான்.." என்று தாபத்தோடு அவள் காது மடல்கள் அருகே உரசியப்படியே சொல்லியவன், அவளது ஈரக் கூந்தலில் முகம் புதைத்து வாசம் பிடித்தான்.
"என்ன ஷாம்பூ போட்ற.. உன்னோட கூந்தல் இத்தனை வாசமா இருக்கு.. இது ஷாம்பூ வாசம் தானா? இல்லை உன்னோட கூந்தலுக்கே உரிய ஸ்பெஷல் வாசனையா? திருவிளையாடல் படத்துல மன்னனுக்கு வந்த டவுட் எனக்கும் வருதே.. பேசாம திரும்ப இதுக்கு ஒரு ஆராய்ச்சி