நடத்திடலாமா?" என்றுக் கேட்க,
கார்த்திக் இப்படியெல்லாம் பேசுவானா? என்பது தெரியாமல் நித்யாவிற்கு அவனது இந்த பேச்சு வியப்பளித்தது.
"என்ன பதிலே பேச மாட்டேங்குற.." என்று அவளை தன்புறம் திருப்பியவன்,
"காலையிலேயே தோட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சிட்டீயா? தோட்டம்னா உனக்கு பிடிக்குமா? நான் கூட இப்போல்லாம் தோட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்.. ஏன்னு சொல்லு?" என்றுக் கேட்டான்.
இப்படி அவனோடு நெருக்கமாக நின்றிருப்பதே அவளுக்கு ஒரு மாதிரி இருக்க, நாணத்தில் அவளால் பதில் பேச முடியவில்லை, அவனை கண்ணோடு கண் பார்க்காமல் தலையை தாழ்த்தியப்படி நின்றாள்.
"நீ அடிக்கடி தோட்டத்தில் நின்னு அங்க இருக்க பூச்செடியை வேடிக்கை பார்ப்பல்ல.. அதுவும் இப்படி ஈரத் தலையோட அங்க நின்னு தலையை காய வைப்பீயே.. அப்போ உன்னை பார்க்கும் போது புதுசா பூத்த பூ போல அழகா இருப்ப.. உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்.." என்று அவன் கூறியதும்,
"என்ன கார்த்திக் மாமா என்னை அடிக்கடி பார்ப்பாங்களா?" என்பது போல் அவள் விழிகளை விரித்து அவனை அதிர்ச்சியாக பார்க்க,
"ஹே எதுக்கு இப்படி பார்க்கிற.. நம்ம கல்யாணம் முடிவான பிறகு தான் அப்படி பார்த்திருக்கேன்.. என்னை தப்பால்லாம் நினைச்சுக்காத.." என்று அவனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்தான்.
ஆனால் அதுவே அவளுக்கு அதிசயம் தானே, அவனுக்கு தான் அவளை பிடிக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளே, அப்படியிருக்க அவன் அவளை ரசித்து பார்க்கிறான் என்றால் அது அவளுக்கு எப்படி இருக்குமாம்,
ஒருவேளை இவள் தானே தன் மனைவியாக போகிறாள், அதனால் அதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டுமென மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டு கட்டாயமாக அவளை ரசிக்க பழகிக் கொண்டானோ, என்றெல்லாம் அவளுக்கு விபரீதமான எண்ணங்கள் ஒருபக்கம் தோன்றினாலும், அவனது பேச்சு அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க, அதை வெளிப்படுத்தும் விதமாக புன்னகை பூத்தாள்.
அதை ரசித்தவன், அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டு, "ஆமாம் நீ என்னை இப்படி சைட் அடிச்சிருக்கீயா?" என்றுக் கேட்டான்.
அவனைப் பார்த்தால் எப்போதும் ஒரு பிரமிப்பு தான், அவனை எத்தனையோ முறை