தொடர்கதை - காணாய் கண்ணே - 34 - தேவி
ப்ரித்வி சொன்னதைக் கேட்ட கிருத்திகா அதிர்ச்சியில் பேச்சற்றுப் போனாள். அவளின் நிலை கண்டு , ப்ரித்வி கண் முன் சொடக்கு போடவும், தன்னிலை திரும்பினாள்.
அதன் பிறகு தன்னைச் சுதாரித்து,
“என்ன திடீர்னு?” என்றுக் கேட்டாள்.
“நாம் எதிர்பார்த்த படி அந்த செல்வத்த சிக்க வைக்க முடியலை. ஏதோ ஒரு வழியில் எஸ்கேப் ஆயிடுறான். அதோட அவன் நேரில் வராமல் இதைப் பன்றதால் , வேறே மாதிரி தான் சூழ்நிலை உருவாகுது. அவன் அனுப்புற ஆளுங்க கையில் சிக்கினால் மட்டும் தான் அவன் வெளியில் வருவான்னுத் தோணுது. அதான் இப்படி யோசிக்கறேன்”
“ஓ” என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருக்கவும்,
“என்ன ஆச்சு கிருத்தி?” என்றுக் கேட்டான்.
“தெரியலை. எந்த சூழ்நிலையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்குதான். அதே சமயம் நானே வலிய போய் ஒரு ஆபத்தில் மாட்டிகிறது அப்படின்னா கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள்.
“ஹ. கரப்பான் பூச்சியைக் கொல்ல நாயை ஏவி விடும் வீராங்கனைக்கு பயமா?” என்று சிரிப்புடன் கேட்கவும்,
“ஹா” என்று அதிர்ந்தாள் கிருத்திகா. அவளின் வீக்னெஸ் ப்ரிதிவிக்கு எப்படித் தெரியும் என்று திகைத்தாள். அதைக் கேட்கவும் வெட்கமாக இருந்தது. ஒருவேளை போட்டு வாங்குகிறாரோ என்றும் தோன்றவே , உதட்டைக் கடித்து மௌனமானாள்.
“என்ன பதில் வரலை?” என்று மீண்டும் சீண்டவும்,
“ஹலோ.. கரப்பான் பூச்சிக்குப் போய் யாராவது பயப்படுவாங்களா?” என்று பதில் கொடுத்தாள்.
“அப்போ நீ நாய்க்கு தான் பயப்படுவியா? அத விரட்டதான் கரப்பான் பூச்சிய அனுப்பினியா?
“இந்த கிண்டல் எல்லாம் வேணாம். ஏன் நீங்க மட்டும் கரப்பான் பூச்சி பக்கத்துலே வந்தா, ஆஹா. வாரும் கரப்பான் பூச்சியாரே. இதோ தங்களுக்கு வேண்டியதை தாரளமாக எடுத்துக் கொள்ளும். அப்படின்னு வரவேற்புரை வாசிச்சுட்டு இருப்பீங்களோ” எனக கேட்கவும்,
அவள் சொன்ன தொனியில் கற்பனை செய்தவனுக்குச் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. அவனின் அந்தச் சிரிப்பைக் கிருத்தி ஆவ்வ் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஆண்களின் சிரிப்பு இத்தனை அழகாகக் கூட இருக்குமா என்று பார்ததிருந்தாள்.
ப்ரித்வி சிரித்து முடித்து கிருத்தியை என்ன என்பது போலே கேட்கவும், வெட்கத்துடன் ஒன்றுமில்லை என்று தலை கவிழ்ந்தாள்.
“கிருத்தி , செம போ. உன் ஸ்பாட் கவுன்ட்டர் எல்லாம் சான்ஸ்லெஸ். “ என்று மீண்டும்