அங்கே ஜெய்பூர் ஸ்பெஷல் என்னவென்றுக் கேட்டு ஆர்டர் கொடுத்துச் சாப்பிட்டனர். இவர்கள் க்ரூபில் உள்ளப் பாதிபேர் பூட் கோர்ட் வந்து இருக்க, மீதம் இருந்த சிலர் , அங்கிருந்த பிஸ்சா ஹட் மற்றும் வேறு சில கடைகளுக்குச் சென்று இருந்தனர்.
அரட்டை அடித்தபடி சாப்பிட்டு முடித்தவர்கள், ப்ரித்வி சொல்லியிருந்தபடி அந்த நீருற்று அருகே ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.
ஒரு சிலர் அப்படியும் லேட் செய்து விட, மற்றவர்கள் அவர்களுக்குப் போன் செய்து அழைத்தனர். குறிப்பிட்ட நேரத்தை விட அரை மணி நேரம் அதிகமாகி விடவே, எல்லோரையும் பத்திரமாக தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றான் ப்ரித்வி.
அவரவர் அறைக்குச் செல்லும் போது, கிருத்திகா அவள் வால் ஹாங்கிங் சற்று வெயிட் இருக்கவே, லிப்ட்டில் முதலில் செல்லாமல், அடுத்த செட்டில் செல்வதற்காக நின்றாள்.
மற்றவர்கள் படியில் ஏற ஆரம்பித்து இருக்கவே, கிருத்தி மட்டும் தனியே நிற்பதைப் பார்த்த ப்ரித்வி, அவளோடு நின்று கொண்டான்.
அப்போது “கிருத்தி, பிரதாப் சார் கிட்டப் பேசினியா?” என்றுக் கேட்டான்.
“ஹா. பேசினேன்”
“என்ன சொன்னாங்க ?”
“உங்க பிளான் படி நடந்துக்கச் சொன்னாங்க”
“ஒ. குட். நீ தைர்யமா இருந்தாப் போதும்”
“ஓகே. என்னிக்குக் கடத்தப் போறாங்க? நாளைக்கேவா?”
“ஹ. அப்படி எல்லாம இல்லை. இப்போ உடனே அவங்க ட்ரை பண்ணும்போது நீ மாட்டிக்கிட்டா, அவங்களுக்குச் சந்தேகம் வந்துடும். சோ முடிஞ்சா வரை அதைத் தடுக்கிற மாதிரி, உனக்கு கார்ட்ஸ் சுற்றி நிற்கிற மாதிரி செட் அப் பண்ணியிருக்கோம். அவங்க அதைப் பார்த்துட்டே இருக்கிறதால், கொஞ்சம் டைம் எடுத்துத் தான் பண்ணுவாங்க. எனக்குத் தெரிஞ்சு இங்கே கடத்தல் இனிமே நடக்க வாய்ப்பு இல்லை. டெல்லியில் வைத்து முயற்சிப் பண்ணலாம். “
கிருத்திக்கு எப்படியோ இருந்தது. பின் “நாம் டெல்லி போறோம்னு அவங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றுக் கேட்டாள்.
“நம்ம ஐடேனரி எல்லாம் அவங்களுக்கு முதல் நாளே தெரியும். அதனால் தான் இடம் பார்த்து அவங்க உன்னைத் தூக்கிப் போக முயற்சி செய்து இருக்காங்க”
“அப்படி எனக்குத் தோணலை. அது எதேச்சையா நடந்து இருக்கும்.“