சிரிக்கவும், தன் பேச்சை தவறாக நினைக்காமல் சிரித்ததுக் கண்டு அவளுக்கு மகிழ்ச்சியே.
என்னதான் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பயிலும் கல்வி நிறுவனம் என்றாலும், அடுத்த பாலினத்தவருடன் பேசும் போது சற்று எச்சரிக்கையோடு தான் நடந்து கொள்வாள். தான் விளையாட்டாகச் சொல்லும் ஒரு வார்த்தைக் கூட வீணான வம்புக்கு வழி வகுக்கலாம் என்ற கவனம் எப்போதும் இருக்கும்.
செல்வம் போன்றவர்களின் எல்லை மீறிய செயல்கள் என்றால் தான் அதற்கு பதில் கொடுப்பாள். மற்றபடி சிரித்தோ, முறைத்தோ சமாளித்து விடுவாள்.
ஆனால் தன்னை விட வயதில் மட்டுமில்லாமல், பொசிஷனிலும் மேலோங்கி இருப்பவன், சின்ன சின்னக் கேலிகளை இயல்பாக எடுத்துக் கொள்வது ஆச்சர்யமாக இருந்தது.
பிறகு நினைவு வந்தவளாக,
“அது என்ன கரப்பான் பூச்சி, நாய் என்று ஜூவிற்குள் நுழைந்தது போல் பேசிக் கொண்டு இருக்கறீர்கள்?” என்றுக் கேட்டாள்.
“ஹ. உன்னைப் பற்றிய விவரம் சொல்லும் போது, உன்னை அடையாளம் தெரிவதற்காக உன் போட்டோ கேட்டு இருந்தேன். உன் பெரியப்பா வாட்ஸ்அப்பில் இருக்கும் புகைப்படம் அனுப்பி இருந்தார். அதைப் பார்த்த பின் தான் உன்னுடைய வீராதி வீரம் எல்லாம் ஆறறிவு மனுஷங்க கிட்டே தான். ஐந்தறிவு ஜீவன்கள் எல்லாம் உன் லிஸ்ட்லே இல்லை போலேன்னு நினைச்சேன்”
அவன் சொன்ன விதத்தில் சிரித்தவள்,
“எந்தப் போட்டோ?” என்றுக் கேட்கவும், அவன் மொபைலில் காட்டினான்.
அதைப் பார்தவளுக்கும் சிரிப்பு வந்தது. சில நாட்களுக்கு முன் செக்யுரிட்டி சர்வீஸ் ஆபீஸ்க்கு என்று ஒரு நாய் வாங்கி இருந்தனர். தொடர்ந்து விடுமுறை என்று அநேகம் பேர் லீவில் போயிருக்க, இருந்த கொஞ்சம் ஸ்டாப்பும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பிற்குச் சென்று இருந்தனர். அதனால் ஆபீஸ்சில் நாயைத் தனியாக விடமுடியாது என்று வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தார் கிருத்தியின் பெரியப்பா பிரதாப்.
கிருத்தி கரப்பான் பூச்சியைப் பார்த்து அலறின சத்தத்தில் , நாய் என்னவோ ஏதோ என்று இவள் ரூமிற்கு வந்து நிற்க, நாயைக் கண்டு பயந்து இவள் சோபா மேல் ஏறி நின்று இருந்தாள். அந்த நேரத்தில் அவள் அம்மா, அப்பா இல்லை பெரியப்பாவேயோ இந்தப் போட்டோ எடுத்து இருந்து இருக்கிறார். அதையே அவர் ப்ரித்விக்கும் கொடுத்து இருப்பார் என்று எண்ணவில்லை.
சற்று வெட்கத்தோடு அன்றைய சூழ்நிலையை விளக்கவும், ப்ரித்வியும் சிரித்தான். பிறகு