தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 03 - ஸ்ரீ
மாலை நான்கு மணியளவில் தனக்கு வந்த அலைப்பேசி அழைப்பை ஏற்று பேசியவாறே அறையை விட்டு வெளியே வந்த ஷியாமாவின் கண்களில் நான்கு கார்கள் வரிசையாய் உள்ளே நுழைவது பட்டது.அழைப்பை விரைவாய் முடித்துவிட்டு அங்கு கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.
ஒவ்வொருவராய் இறங்கி உள்ளே செல்ல,அவளுக்கு யாரிடமும் சுயவிவரம் கொடுத்து பழக்கமிருந்ததில்லை ஆதலால் இத்தனை பேரை சமாளிக்க வேண்டுமா என்று சலிப்பாய் இருந்தது ஷியாமாவிற்கு.
அதற்கேற்றாற் போல் அவளின் வேலையும் அவள் யாருக்காகவும் யோசித்து செயல்பட வேண்டிய நிலையில் இல்லாததால் தன் உலகத்தில் அவளே ராணியாக இருந்தாள்.
இப்போது கீழே சென்றால் ஒவ்வொருவரின் கேள்விக்கும் பதில் கூறியே தீர வேண்டும்.அதிலும் அனைவரின் ஆடம்பரமும் அவரவர் நடை உடை பாவனையிலேயே தெரிந்தது.இந்த வகை மனிதர்களை கண்டாலே வேறு அவளுக்கு மிகுந்த அலர்ஜி..இதுவும் தன் வேலை தான் என்று மனதில் பதிய வைத்து அவர்களை சந்திக்கும் நேரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அவளின் அறைகதவு தட்டப்பட்ட திறந்தவளின் எதிரில் கல்யாணி நின்றிருந்தார்.
“உங்களை பார்க்குறதுக்கு எல்லாரும் காத்துட்டு இருக்காங்க..”
“ஓ இதோ வரேன்..”என்றவள் அறையை பூட்டிவிட்டு அவரோடு கீழே இறங்கினாள்.மாடியிலிருந்து இறங்கும் போதே பெண்கள் நல்வரும் அவளையே பார்த்திருக்க ஆண்கள் எதோ ஒரு விஷயத்தைப் பற்றி தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர்.
நான்கு பேர் வட இந்திய சாயலிலும் நான்கு பேர் தமிழ்நாட்டு சாயலிலும் இருந்தனர்.அருகில் வர வர அவர்களின் பார்வையின் கூர்மை அதிகரித்திருந்தது.தன்னை இயல்பாக்கிக் கொண்டவளாய் அவர்களின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவளை சற்றே அதிருப்தியாய் பார்த்தனர் அனைவரும்.
கேட்காமல் அமர்ந்ததற்கான எதிரொலி என்பது அறிந்தாலும் பெரிதாய் எதையும் காட்டிக் கொள்ளாதவளாய் மிதமான புன்னகையோடு அனைவரையும் பார்த்து,
“ஹாய் அங்கிள் ஹாய் ஆன்ட்டி..”,என்று பொதுவாய் கூறி முடித்தாள்.
“நீங்க தான் இந்த வீட்டோட புது விருந்தாளியா?பேரு?!”
“ஷியாமா”
“ஆங்..ஆமா மகிழனை எப்படி தெரியும் எப்போ இருந்து ப்ரெண்ட்ஸ் உங்களை எதுக்காக இங்க