(Reading time: 10 - 19 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

என்னம்மா அறையெல்லாம் வசதியா இருக்கா?ஒண்ணும் குறையில்லையே?”

முத்து அண்ணா??”

தம்பி என்னைப் பத்தி கூட சொல்லிருச்சா..”

ம்ம் பின்ன நான் இங்க வந்தப்பறம் உண்மையான பரிவோட கேட்குற நலம் விசாரிப்பாச்சே..”

அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்குறதில்ல இல்லையா அப்படிதான் இந்த குடும்பத்தோட மனுஷங்களும்..”

விளையாட்டுக்கு கூட விட்டு கொடுக்க மாட்டீங்க போலேயே?”

என் உசுரு உடம்புல ஒட்டியிருக்க காரணமே இந்த குடும்பத்துக்காக தான்.அப்பறம் எப்படி?”

சரி சரி நான் சும்மா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க..”

“..”

சரி கண்ணு உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு நான் செஞ்சு தரேன்.வெளில போறதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டு போம்மா..நீயும் தம்பி மாதிரி தான் எனக்கு.உன்னை பத்திரமா பார்த்துக்கணும்னு தம்பி சொல்லிருக்கு.”

கண்டிப்பா எதுவானாலும் உங்ககிட்டயே சொல்லுறேன் ண்ணா..”

நல்லதும்மா..சாப்பாடு தயாரானவுடனே சொல்லி அனுப்புறேன் வந்துரு..நான் வரேன்..”,என்று கூறிச் சென்றார்.

அதன்பின் அவள் இரவு உணவிற்காக வந்த நேரம் பெரியவர்கள் ஏற்கனவே உணவை முடித்துக் கிளம்பியிருக்க வர்மா குடும்பத்தின் வாரிசுகள் அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர்.

ஹாய் கைஸ்..”,என்றவாறு ஷியாமா தனக்கான இருக்கையில் அமர்ந்தாள்.அவளைக் கண்டு யாரும் பெரிதாய் அலட்டிக் கொண்டதாய் தெரியவில்லை.அவளும் அதை பெரிது பண்ணியதாய் தெரியவில்லை.சட்டென அவளின் பின்னிருந்து வந்த குரலில் அனைவருமாய் அங்கு நோக்கினர்.

ஒருத்தங்க வீட்டுக்கு கெஸ்டா வந்துருக்காங்கனா அவங்களை உபசரிக்குறது நம்ம கடமைனு சொல்லி கொடுத்துதான் வளர்த்துருக்காங்கனு நம்புறேன்.”,என்றவாறு விரைப்பாய் வந்தமர்ந்தான் மகிழன்.

ஹாய்..”,என்று பள்ளிப் பிள்ளைகள் போல் அனைவருமாய் ஒரே நேரத்தில் கூறுவதைப் பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

இட்ஸ் ஓகே மகிழன்..நோ இஷுஸ்..பை த வே ஐ அம் ஷியாமா.”என்று தன்னை அறிமுகப் படுத்தியவாறு அனைவரின் முகத்தையும் ஆராய்ந்தபடி இறுதியாய் மகிழனின் முகம் நோக்கி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.