(Reading time: 12 - 23 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

தொழிலை விரிவுப்படுத்த தேவையான பணம் கொடுத்தோம்.. ஆனா எங்களை மருந்துக்கு கூட மதிக்கல..

சரி எங்களை மதிக்கலன்னாலும் பரவாயில்லை.. ஆனா கார்த்திக்கிற்கு எதுக்கு இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் செய்து வச்சீங்க.. அழகா இருந்தா போதுமா? நல்லா படிச்சிருக்க வேண்டாமா? நாலு பேர் கூட நல்லா பழக வேண்டாமா? மண்டபத்தில் கார்த்திக் கூட ஜோடியா பார்க்கும்போது நல்லா பொருத்தமா தான் இருந்தா.. ஆனா பொண்ணு ரொம்ப அமைதி போல.. எங்க ஆளுங்க ஏதாச்சும் கேட்டா திருதிருன்னு முழிக்கிறாளாம்..

பாவம் அவளும் சின்ன பொண்ணு தானே.. அவளை குறை சொல்ல முடியாது.. ஆனா அவ கார்த்திக்கிற்கு பொருத்தமா இருப்பான்னு நீங்க எப்படி நினைச்சீங்க.. அந்த பொண்ணு உங்களோட பேத்தியா இருக்கலாம்.. அதுக்காக அவளை கார்த்திக்கிற்கு தான் கட்டிக் கொடுக்கணுமா? ஒரு நல்ல பையனா பார்த்து நீங்களே கல்யாணம் செய்து வச்சிருக்கலாமே.." என்று குறிஞ்சியம்மாளை பேச விடாமல் அந்த பெரியவர் பேசிக் கொண்டே போக,

"இங்க பாருங்க ண்ணா.. கார்த்திக்கிற்கு நீங்க எவ்வளவு உயர்வான பொண்ணைக் கூட கொண்டு வந்திருக்கலாம்.. ஆனா கார்த்திக்கிற்கும் நித்யாவிற்கும் தான் முருகன் முடிச்சு போட்ருக்காரு.. அதை என் மூலமா நடத்தி வச்சாரு அவ்வளவு தான்,

நான் என்னமோ நீங்க கொண்டு வந்த வரனெல்லாம் வேண்டாம்னு சொன்னது போல பேசறீங்க.. நாங்க எவ்வளவு கார்த்திக்கிற்கு முக்கியமோ, அதேபோல அவனோட அம்மா வழி தாத்தா நீங்களும் அவனுக்கு முக்கியம்.. அதை அவனுக்கு எடுத்து சொல்லி தான் வளர்த்திருக்கேன்..

அதேபோல நீங்க கொண்டு வந்த பொண்ணுங்களை கார்த்திக்கிற்காக பார்க்கவும் செஞ்சோம்.. ஆனா எதுவும் ஒத்து வரல.. ஏதாவது ஒரு வழியில் அதெல்லாம் தட்டிப் போச்சு.. அப்போ தான் என்னோட பொண்ணும் பேத்தியும் வந்தாங்க.. அப்போக்கூட அவங்க வந்ததும் நான் அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு நினைக்கல..

கார்த்திக்கிற்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்யணும்னு நினைச்சேன்.. அதேபோல நித்யாவிற்கும் நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்யும் பொறுப்பு எங்களுக்கு இருக்கு.. அதைப்பத்தி யோசிச்சப்போ, ஏன் அவங்க ரெண்டுபெரையும் சேர்த்து வைக்கக் கூடாதுன்னு தோனுச்சு..

அதைப்பத்தி என்னோட பிள்ளை, பொண்ணுக்கிட்ட பேசினேன்.. அவங்களுக்கும் இதுல பரிபூரண திருப்தி.. அதோட கார்த்திக்கிட்ட பேசினேன், இங்கப்பாருங்க பாட்டி நான் சொன்னதால அவன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கலாம்.. ஆனா நித்யாவை சுத்தமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.