"இங்கப்பாரு.. அவர் ஏதோ சொல்றாருன்னு நீ கவலைப்படாத.. அப்படியே பேரன் மேல அக்கறை இருப்பது போல் பேசுவாரு.. ஆனா மகள் இறந்து காரியம் முடியும்வரை தான் அவர் அக்கறை, பாசமெல்லாம் அப்புறம் தொழில் மேல அவங்க கவனம் செலுத்திட்டாங்க.. சும்மா எப்போயாச்சும் பேரனுக்கு போன் போட்டு அக்கறை இருப்பது போல் காமிச்சுப்பாங்க.. அதனால் இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்காத.." என்று சமாதானம் கூறினார்.
"நான் அவங்க கேட்டதுக்கு பதில் சொல்லாம முழிக்கல பாட்டி.. நேத்து அலங்காரம் பண்றேன்னு பர்ஸ்ட் நைட் பத்தி என்னென்னவோ பேசறதும் கேட்கிறதுமா இருந்தாங்க.. அதுக்கு எப்படி பாட்டி பதில் பேச முடியும்?" என்றுக் கேட்டாள்.
இதையும் வெளியில் சொல்லியிருக்க மாட்டாள். ஆனால் கார்த்திக்கின் உறவினர்களிடம் பதில் பேசாததற்கு பாட்டி ஏதாவது தவறாக நினைக்கப் போகிறார்கள் என்பதால் விஷயத்தை கூறினாள்.
இதுதான் படிச்சவங்க நடந்துக்கிற விதமா? கொஞ்சம் கூட இங்கீதம் இல்லாம.. இதில் எதுவும் தெரியாம இவர் வேற பேசிட்டு போறாரு.. இதோ மதியமே அவங்க கிளம்பிடுவாங்க நித்யா, அடுத்து இங்க என்ன நடக்குதுன்னு கூட கவலைப்பட மாட்டாங்க.. அதனால தேவையில்லாம நீ கவலைப்படாத.. போ கார்த்தி கூட எங்கேயாச்சும் வெளிய போயிட்டு வா.." என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
ஆனாலும் நித்யாவிற்கு கார்த்திக்கின் தாத்தா பேசியது மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது. ஏற்கனவே அவள் நினைத்து குழம்பும் விஷயத்தை இன்று அவர் சொன்னால், பின் அவளுக்கு எப்படி இருக்குமாம்.. அதனால் அதையே நினைத்தப்படி அன்னை சொன்ன வேலையை செய்ய சமையலறைக்குச் சென்றாள்.
அந்த நேரம் குளித்துவிட்டு அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்த கார்த்திக் ப்ளுடூத் மூலமாக யாரோடோ அலைபேசியில் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தான்.
திருமண விஷயமாக மூன்று நாட்களாக அவனும் அவன் தந்தை ஞானசெல்வமும் அவர்களின் அலுவலகத்திற்கு செல்லவில்லை, அப்படியிருக்க அலுவலகத்தில் யாரோ செய்த தவறால் குளறுபடிகள் நடக்க, அதைப்பற்றி அவனுக்கு தகவல் சொல்ல, அது விஷயமாக அவனுக்கு உடனே அலுவலகம் செல்ல வேண்டிதிருந்தது.
அவன் அங்கு போய் சேர்வதற்குள் என்னென்ன செய்ய வேண்டுமென ஆணைப் பிறப்பித்தவன், முழுவதுமாக தயாராகி கிளம்ப ஆயத்தமாக, அப்போது தான் உள்ளே வந்த நித்யா, "கிளம்பிட்டீங்களா மாமா.. இதோ தலைப்பின்னுக்கிட்டு வந்துட்றேன்.." என்று சொல்லவும்