பெயருக்கும் அர்ச்சனை செய்ய சொல்லி இருவரின் பெயர், ராசி, நட்சத்திரம் எல்லாம் கூற, அவன் இதெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறானே என்பது கூட அவளது மூளைக்கு எட்டவில்லை,
இதற்கு மேலும் அவன் முன்னால் எந்த தவறும் செய்து விடக் கூடாது என்ற மனநிலையிலேயே கடவுள் சன்னிதானத்தின் முன் அவள் விளக்கேற்ற ஆயத்தமாக, அவளுக்கு இருந்த பதட்டத்தில் சரியாக வத்திகுச்சியை கூட உரச முடியாமல் அவள் திணற, இரண்டு மூன்று குச்சிகளை வீணாக்குவதை பார்த்து,
"என்ன உனக்கு வத்திக்குச்சி கூட கிழிக்க தெரியல.." என்று அவன் வாங்கி விளக்கேற்ற, என்னவோ அவன் சாதாரணமாக கேட்டது எல்லாம் அவளுக்கு அவமானமாக தெரிந்தது.
"காலையில் நன்றாக பேசிய கார்த்தி மாமாவா இவங்க.." என்று வேறு அவளுக்கு அந்தநேரம் தோன்ற ஆரம்பித்தது.
அவனுக்கோ அலுவலகத்தில் இருந்து இரண்டு மூன்று முறை அழைக்கவும் அந்த பிரச்சனையில் அவளிடம் கொஞ்சம் சிடுசிடுவென்று தான் பேசினான். இதில் அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால்,
"நித்தி.. எனக்கு அவசரமா ஆஃபிஸ் போக வேண்டியிருக்கு.. அதனால நீ வீட்டுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு போ.." என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பவும்,
சென்னை வந்த இந்த ஒரு வருடத்தில் தனியாக அவள் எங்கும் சென்ற்தில்லை, இதில் அழைத்து வந்த கணவன் இப்படி விட்டுவிட்டு போகவும், ஏனோ அவளுக்கு அழுகை வர, அவன் கார் சென்ற திசையை பார்த்தப்படி நின்றிருந்தாள்.
தொடரும்..