(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“அப்படினா கல்யாணம் வேணாம்னு சொல்லி இருக்கலாமே”

“அப்போ என் தாத்தா ஒத்துக்கலை”

“இப்போ…”

“ப்ச்…  அவர்  இற்ந்துட்டார் சார்.

“ஸோ… அத்தோட அவர் நடத்தி வைத்த  இந்த கல்யாணத்திற்கும் முற்று புள்ளி வைக்க நினைச்சுட்டீங்க”

“ஆமாம்” அதிதியின் உறுதியான குரல் அவரை திகைக்க வைத்து.

அவருக்கு அதிரதன் பற்றிகூட கவலையில்லை. அவனுடைய படிப்பிற்கும் சம்பாத்தியத்திற்கும் விரைவில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வான். ஆனால்இந்த பெண்ணிற்கு இருபத்து  வயதுதான்.  அதற்குள்ளாக ஒரு கல்யாணம்… ஒரு விவாகரத்து… அவளுக்கு பாதுகாப்பாக இருந்த தாத்தாவும் இறந்து விட்டார். வாழ்க்கையை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்…

“சரி, உங்களுக்கு விவாகரத்து வேண்டுமென்று கேட்க ஒரு சரியான காரணம்கூட தரவில்லையே.”

“மனம் ஒத்து போகவில்லை என்பதே ஒரு காரணம்தானே சார்.”

“அதை இரண்டு பேரும் ஒப்புக் கொள்வதே பொய். அதிரதன்… உங்களுக்கு விருப்பப்பட்டுதானே  திருமணம் செய்து கொண்டீர்கள்?”

"வீட்டில் பார்த்த நிச்சயித்த திருமணம். என்னுடைய வேலைல நான் கவனமாக இருந்ததுனால அவங்களை நம்பி கல்யாணம் செய்துட்டேன். ஏமாத்திட்டாங்க"

"உங்களுக்கு ஏத்தமாதிரி பார்க்கவில்லைன்னு சொல்றீங்களா?"

"ம்.. எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு நான் கேட்கவில்லை. அவங்க விருப்பம்தான் என் விருப்பம்னு சொல்லியிருந்தேன்.  அப்படியும்…"

"பொறுப்பில்லாமல் இந்த பெண்ணை கல்யாணம் செய்து வச்சிட்டாங்க. அப்படித்தானே.. "

அதிரதன் தலையாட்டும் முன்பே…

"அவங்களை பொறுப்பில்லாதவங்கன்னு சொன்னீங்க நான் மனுசியாகவே இருக்க மாட்டேன். அவங்க ரொம்ப நல்லவங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும்."

"அப்படியா..  இவரோட வீட்டில் வேறு யாரெல்லாம் உங்களுக்கு பிடித்தவர்கள்.?"

" கௌதம் அண்ணா.. மகி அண்ணி .. "

அப்படி என்றால் இந்த பிரச்சினைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை.. அடுத்த காரணம்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.