(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"என்னை பார்த்து கொள்ள எனக்கு தெரியும் சார். யார் தயவும் எனக்கு தேவை இல்லை" .அதிதி குறுக்கிட்டாள்.

அவளுடைய வார்த்தைகள் அவனை சீண்டி விட்டன.

"ஆமாம் சார். அதை பற்றி நான் எதுக்கு கவலைப்பட வேண்டும்."

அந்த கவுன்சலர் அமைதியாக இருவரையும் பார்த்து விட்டு..

"யாருக்கு என்ன பொறுப்பு என்று புரிந்து கொள்ளனும். " என்று சொல்லி 'அடுத்த கவுன்சிலிங அக்டோபர் 14' என்று எழுதி கையெழுத்து போட்டார்.

அதை பார்த்த அதிரதன் அதிர்ச்சி அடைந்தான். அவன் பேசும் முன்பே..

"இது என்ன அநியாயம் சார். இன்னும் பத்து நாட்கள் நான் இந்த மூஞ்சியை பார்த்துட்டு இருக்கணுமா? என்னால முடியாது. "

மூஞ்சியா? அவனுக்கு கோபம் வந்தது.

"எனக்கு மட்டும் உன்னை பார்க்க பிடிக்குதா என்ன?"

"நான் உங்களிடம் பேசலை. சார்… இப்பவே ரெக்கமெண்ட் பண்ணுஙக. சீக்கிரமே இவரிடம் இருந்து விலகணும். " என்று சொன்னவள், பதட்டமானாள்.

"எனக்கு அவங்க வீட்டில் மூச்சு திணறுது… "

"எங்களோட ஊருக்கு போகணும்"

"இவரை மறக்கனும்.. ஹாங்… ஒரு நாலு நாள் சேர்ந்த மாதிரி பார்க்காமல் இருநதேனா மறந்துடுவேன்.."

கோபமும் பதட்டமுமாக கூச்சல் போட ஆரம்பித்தாள்

திகைத்து போய் அவன் அமர்ந்து இருக்க,

"அமைதியாக உட்காரனும் அதிதி. இப்படி கூச்சல் போட்டால் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து விடுவேன்." கடும் குரலில் மிரட்டினார்.

அவருடைய மிரட்டல் வேலை செய்தது. அதிதி சட்டென அமைதியானாள்.

"அடுத்த வாரம் கண்டிப்பா கவுன்சிலிங்கிற்கு வரணும். இப்ப நீங்க போகலாம்" என்று சொன்னார்.

அவர் சொன்னதும் ஒரு விரைவுடன் எழுந்து அவள் வெளியேறினாள்.

நன்றி சொல்லி எழுந்த அதிரதனிடம்,

"உங்களிடம்தான் அவங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு. அவங்களுக்கு உங்க உதவி தேவைப்படும் என்று தோன்றுகிறது. ம்… அடுத்த கவுன்சிலிங் போது பார்க்கலாம்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.