(Reading time: 12 - 23 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 07 - சித்ரா. வெ 

ங்கியிருந்த ரெசார்டின் உணவு கூடத்தில் சாப்பிட்ட இருவரும் மூனாரின் சுற்றுலா பகுதிகளை சுற்றிப் பார்க்க காரில் கிளம்பினர். கார்த்திக் அவளை அப்படி திட்டியதில் காயப்பட்டவளுக்கு சாப்பாடு கூட சரியாக இறங்கவில்லை.

அவன் அவளை திட்டியபோதே அவள் கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்க்க, அதற்குள் கார்த்திக் அழைத்ததால் அங்கு வந்த அவர்களின் ஓட்டுனர், "சார் போகலாமா?" என்று அழைக்க,

"இதோ சாப்பிட்டு வந்துட்றோம், கொஞ்சம் காத்திருங்க" என்றவன்,

"நீங்க சாப்பிட்டீங்களா?" என்று அவரைப் பார்த்து கேட்டான்.

"நான் சாப்பிட்டேன் சார்" என்று அவர் பதில் கூறவும்,

"சரி கொஞ்ச நேரத்தில் வந்துடுவோம்.." என்று அவரிடம் சொல்லிய கார்த்திக்,

"வா நித்தி.." என்று அவளை அழைத்துச் சென்றான்.

ஓட்டுனரின் வருகையால் கண்களை தாண்டி வர இருந்த கண்ணீரை இருவரும் பார்க்கும் முன்பே நித்யா நாசூக்காக துடைத்திருந்தாலும், அடுத்தும் கண்ணீர் எட்டிப் பார்க்கவா? என்று கண்களில் காத்திருந்தது.

அதை கண்டுக் கொண்ட போதும் காட்டிக் கொள்ளாமல், "என்ன நித்தி சாப்பிட்ற?" என்றுக் கேட்டான்.

"இட்லி போதும்" என்று அவள் பதில் கூற,

"அடிக்கடி வீட்ல அதுதானே சாப்பிட்றோம், இங்க வந்தும் அதை தான் சாப்பிடணுமா? இங்க என்ன ஸ்பெஷலோ அதை சாப்பிடலாமே?" என்றவன்,

"புட்டும் கொண்டைக் கடலையும் சொல்லட்டுமா?" என்றுக் கேட்டான்.

இப்போதைக்கு அவளுக்கு எதையும் சாப்பிட பிடிக்கவில்லையென்றாலும், தன் மறுப்பை வெளிப்படுத்தாமல், சரி என்று தலையசைத்தாள்.

இருவருக்கும் உணவை வரவழைத்தவன், நல்ல பசியிருக்கவே நன்றாக சாப்பிட, அவளோ சாப்பாட்டில் கோலம் வரைந்துக் கொண்டிருந்தாள்.

"நல்லா இருக்கா நித்தி" என்றுக் கேட்க, அதற்கும் தலையை மட்டுமே அசைத்தாள்.

அவளது செய்கைகளே அவள் கோபமாக இருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்த தான் செய்தது. கொஞ்சம் அதிகப்படியாகவே திட்டியதையும் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அவளை சமாதானம் செய்ய தோன்றவில்லை. அந்த அளவுக்கு அவனுக்கும் அவள் மீது கோபம் இருந்தது.

அவள் முதலில் வழி தவறி பின் வழியை தேடி கண்டுபிடித்து வந்ததில் அவனுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.