(Reading time: 12 - 23 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

ஆனா எப்படி இருந்திருக்கேன் பாரு? என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு? ஒவ்வொரு முறையும் நான் கில்டியா ஃபீல் செய்றது போல தான் ஏதாவது நடக்குது. நம்ம கல்யாணம் முடிவான பிறகு, ஒரே வீட்ல இருக்கோம், உன்னோட தனியா இருக்க சந்தர்ப்பம், ஏதாவது என்னை எல்லை மீற வச்சிடுமோன்னு முன்ன போலயே இருந்தேன். ஆனா அதுக்காக உன்னைப்பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காமலா இருப்பேன்.

ரொம்ப சாரி நித்தி, முதலில் ஊருக்கு போனதும் ஒரு மொபைல் போன் வாங்கறோம், அதனால இங்க இருக்கும்வரை உன்னை தனியாவே விட மாட்டேன் சரியா?" என்று அவன் கேட்டதில் அவள் உருகி தான் போனாள்.

"சரி ரூமை வெக்கேட் செய்யணும், சீக்கிரம் ரெடியாகணும்," என்று அவன் சொல்ல,

"அடுத்து எங்க மாமா போகப் போறோம்?" என்று அவள் கோபம் குறைந்ததை கேள்வியின் மூலம் தெரிவித்தாள்.

"ம்ம் அடுத்து தேக்கடி, அப்புறம் கோவலம் பீச் போயிட்டு நேரா சென்னை தான்,"

"அப்படியா? அப்போ குருவாயூர் கோவில், சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கெல்லாம் போகப் போறதில்லையா?"

"ம்ம் சபரிமலையை விட்டுட்ட?"

"அதுவும் தான், ஆனா அங்க பொண்ணுங்க போகக் கூடாதுன்னு சொல்றாங்களே, கோவிலுக்கு உள்ளேயே போகக் கூடாதா? இல்ல பதினெட்டு படி ஏறக் கூடாதா?" என்று தன் சந்தேகத்தை கேட்க,

"நாம ஆன்மீக சுற்றுலாவா வந்திருக்கோம்?  ஹனிமூன் வந்திருக்கோம் பொண்டாட்டி" என்றான் அவன்,

"ஏன் மாமா, ஹனிமூன் வந்தா கோவிலுக்கு போகக் கூடாதா?"

"அப்படியில்ல நித்தி, சுத்தி பார்க்கவே நிறைய இடம் இருக்க, அதுக்கே நமக்கு நேரமில்ல, 4 நாள் தானே ட்ரிப், இன்னொரு நாள் வீட்ல எல்லோரையும் கூப்பிட்டுக்கிட்டு கோவிலுக்கெல்லாம் போலாம் சரியா?" என்றவன், அதற்கு மேல் பொறுமையில்லாமல் அவளை அணைக்க,

"மாமா சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னீங்களே, ரெண்டுப்பேரும் குளிச்சு ரெடியாக வேண்டாமா?" என்று அவனை விலக்க முயற்சித்தாள்.

"அதேதான் ரெண்டுப்பேரும் ஒன்னா குளிச்சா டைமை சேவ் பண்ணலாம், ஒன்னும் ப்ராப்ளம் இல்லை." என்றவன், தனக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொண்டே அவளை விடுவித்தான்.

அடுத்து அவன் சொன்னது போல் தேக்கடியில் படகு சவாரி செய்து, சில காட்டு விலங்குகளை பார்த்து மகிழ்ந்தவள், சிறிதும் எதிர்பார்க்காத விஷயமாக கோவளம் கடற்கரைக்கு சென்று ஆசை தீர கடல் அலையில் கால் நனைத்து விளையாடி தன் சிறுவயது ஏக்கங்களை தீர்த்துக் கொண்டவளுக்கு, மனதில் இருந்த சிறு கசப்பும் நீங்கி மகிழ்ச்சியோடு சென்னைக்கு புறப்பட்டவளுக்கு, அங்கேயும் அதே மகிழ்ச்சி நீடிக்குமா?                            

தொடரும்..

Episode # 06

Episode # 08

Go to Verena nee iruppin.. Verethum vendame story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.