(Reading time: 12 - 23 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 08 - சித்ரா. வெ 

தேனிலவு முடிந்து இருவரும் சென்னை திரும்பியதும், கார்த்திக் முதலில் நித்யாவிற்கு  தற்போது நிலவரத்தில் இருக்கும் ஒரு புது அலைபேசியை வாங்கிக் கொடுத்தவன், அதை அவள் எப்படி உபயோகிக்க வேண்டுமென்பதையும் சொல்லிக் கொடுத்தான்.

அவளுக்கு சில பல விஷயங்கள் தெரிவதில்லை என்பதை புரிந்துக் கொண்டவன், முனுக்கென்று தன்னை மீறி வரும் கோபத்தை அவளிடம் காட்டக் கூடாதென்பதில் கொஞ்சம் கவனமாகவே இருந்தான்.

நித்யாவும் அதேபோல் தான், எதிலும் கவனக் குறைவாக இருந்து சில தவறுகளை செய்து விடுவது போல் இனியும் இருக்கக் கூடாது, கார்த்திக்கின் கோபத்திற்கு ஆளாக கூடாது. அவனுக்கு தக்க மனைவியாக நடந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து கொஞ்சம் அதன்படி நடக்கவும் முயற்சி செய்தாள்.

ஆனால் அந்த விஷயத்திலேயே தனது கவனத்தை வைத்துக் கொண்டிருப்பவளால் கார்த்திக்கோடு அன்னியோன்யமாய் மாறுவதற்கு சிரமமாக இருந்தது. அவனருகில் இருக்கும் போதெல்லாம், அவனுக்கு கோபம் வரும்படி நடந்துக் கொள்வோமோ என்ற பயம் தான் அவள் மனதில் குடியிருந்தது.

அதுவே அவளுக்கு விரக்தியையும் கொடுத்தது. கார்த்திக் மாமாவோடு தன் கல்யாணம் நடக்கவில்லையென்றால், இருவருக்குமே அது நல்லதாக தான் இருக்குமென்பது போல் தான் அவள் மனம் அடிக்கடி யோசித்து பார்த்தது.

அவளுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்த கார்த்திக்கிற்கு அவள் மனதில் இருக்கும் குழப்பங்களை கண்டறிய தெரியவில்லை. அவனுக்குமே அதிக வேலைப் பளுவால் அவளுடன் அதிகமாக நேரத்தை செலவழிக்க முடிவதில்லை.

இரவு வெகு நேரம் கழித்து வருபவனுக்கு அவளோடு பேசிக் கொண்டிருப்பதற்கான நேரம் அமைவதில்லை. அப்படியே ஏதாவது பேசலாம் என்று ஆரம்பித்தாலும், அவளிடம் இருந்து ஒற்றை பதில் தான் வரும், அவளாக அவனோடு பேச்சை வளர்க்க மாட்டாள். அதன்பின் அவளுடனான நெருக்கத்தால் அங்கு சாதாரண பேச்சுக்களுக்கு இடமில்லாமல் முத்த பேச்சுக்கள் அங்கே இனிமையாக  தொடர ஆரம்பிக்கும்,

அவனது அருகாமை அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவன் தீண்டல்களுக்கு அவள் ஒத்துழைப்பு கொடுத்தாலும், ஏதோ ஒரு தயக்கம் எப்போதும் அவளை சூழ்ந்திருந்தது.

மனதில் உள்ள குழப்பங்களை கணவனுடன் பேசி தீர்த்துக் கொள்ளாமல் தன்னோடு போட்டு புதைத்துக் கொண்ட நித்யாவிற்கு அவளது திருமண வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. அதை மகிழ்ச்சியாக எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.