அவளை நினைத்து கோபமும் அழுகையும் சேர்ந்து வந்தது.
இரவு அவர்கள் அறைக்கு வந்த கார்த்திக் அவளிடம் பேசக் கூட இல்லை, அவள் அருகிலும் வரவில்லை. அந்த மூன்று நாட்கள் இருவரும் விலகியிருக்க வேண்டும் தான், ஆனால் அதை சொல்ல கூட வாய்ப்பில்லாமல் கார்த்திக் கோபத்தில் விலகியிருந்தது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது.
காலையிலும் நடந்த தவறை சரி செய்ய வேண்டும், அதுவும் என்னவென்றே தெரியாதது என்பதால், கார்த்திக் சீக்கிரமே அலுவலகம் கிளம்பிவிட்டான். அப்போதும் அவளோடு பேசவில்லை. அதில் அவள் வருத்தம் இன்னும் அதிகரிக்க,
இதில் அந்த வீட்டில் வேலை செய்யும் இரு பெண்கள் வேறு யாருக்கும் கேட்காது என்று நினைத்து பேசியது வேறு நித்யாவின் காதில் விழுந்தது.
"நம்ம சின்ன அய்யாக்கு என்ன குறைச்சல்னு இந்த பொண்ணை கட்டி வச்சாங்கடீ?" என்று ஒரு பெண் சொல்ல,
"ஏன் அழகா தானே க்கா இருக்கு அந்த பொண்ணு," என்று இன்னொரு பெண் கூறினாள்.
"அழகா இருந்தா போதுமா? நல்ல விவரமா இருக்க வேணாமா? நேத்து என்ன நடந்துச்சா தெரியுமா? செக்யூரிட்டி தான் சொன்னாரு," என்று நேற்று நடந்ததை அந்த பெண் அப்படியே கூறவும்,
"அப்படியா க்கா, பாவம் சின்ன பொண்ணு, பன்னிரெண்டாவது தான் படிச்சிருக்கு, பார்த்தா கொஞ்சம் பயந்த சுபாவமா இருக்கு, பேத்தியாச்சேன்னு பாட்டி விடாம பேரனுக்கு கட்டி வச்சிட்டாங்க, கொஞ்சம் யோசிச்சி செஞ்சுருந்திருக்கலாம், இனி என்ன செய்ய முடியும்? பாவம் சின்னய்யா அந்த பொண்ணால இன்னும் என்னல்லாம் அனுபவிக்க போறாரோ?" என்று சொல்லி பெருமூச்சு விட, அதை கேட்ட நித்யாவிற்கோ வருத்தம் தாங்காமல் அந்த விபரீத முடிவுக்கு சென்றாள்.
தொடரும்..