மொத்தமும் எடுத்துக்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்தீங்கன்னா, அதில் தேவையானதை நானே எடுத்துப்பேன்."
"எதுக்கும் அவங்கக்கிட்ட கேட்டுட்டு நான் எடுத்து தரேன், கொஞ்ச நேரம் இருங்க," என்றவள், கொஞ்சம் தள்ளிச் சென்று கார்த்திக்கின் அலைபேசிக்கு முயற்சி செய்தாள். ஆனால் அவன் அலைபேசி முழுவதுமாக பாட்டு பாடி நின்று போனது. இரண்டு முறை முயற்சித்து பார்த்தாள். ஆனால் அப்போதும் அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை.
அதற்குள் வந்திருந்தவனோ, மேம் நான் தான் சொன்னேனே, சார் மீட்டிங்ல இருப்பார்னு, அதனால அவர் உங்க காலை அட்டண்ட் செய்ய மாட்டாரு மேம், அதுவுமில்லாம அர்ஜண்டா அந்த ஃபைல் அங்க தேவை மேம், அதை கொடுக்க நீங்க லேட் செஞ்சா, நம்ம கம்பெனி நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்," என்று பயம் காட்டினான்.
நித்யாவிற்கு என்ன செய்ய வேண்டுமென்று புரியவில்லை. அவளுக்கு தெரிந்து கார்த்திக் இதுவரை இப்படி ஆட்களை அனுப்பி எதையும் கொடுத்தனுப்ப சொன்னதில்லை, அதனால் வந்தவனிடம் அவன் கேட்ட கோப்புகளை கொடுக்க யோசனையாக இருந்தது.
ஆனால் வந்தவன் அது அவசியமாக தேவை என்பது போல் சொல்லவும், கொடுக்காமல் இருக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று அவள் விழிக்க,
"மேம் இப்படி யோசிச்சீங்கன்னா எப்படி? ப்ளீஸ் மேம் அது இப்போ ரொம்ப முக்கியம், அதை எடுத்துக்கிட்டு நான் ஆஃபிஸ் போகலன்னா, சார் என்னை திட்டுவாரு மேம், சொன்ன வேலையை சரியா செய்யலன்னா என்னை வேலையை விட்டு கூட எடுத்துடுவார், ப்ளீஸ் மேம்," என்று அவன் கெஞ்சவும்,
"சரி இருங்க எடுத்துட்டு வரேன்," என்று அறைக்குச் சென்றவள், கார்த்திக்கின் அலுவலக அறைக்குச் சென்று அழகாக அடுக்கி வைத்திருக்கும் கோப்புகளை கொண்டு வந்தாள்.
அதை ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்தவன், ஒரு குறிப்பிட்ட கோப்புகளை எடுத்தவன், "மேம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?" என்றுக் கேட்க, நித்யாவும் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும்,
அதை வாங்கி பருகியவன், "இதுதான் மேம் அந்த ஃபைல், ரொம்ப தேங்க்ஸ் மேம்," என்று சொல்லிவிட்டு அதை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
அன்று இரவு அனைவரும் சாப்பிடுவதற்கு முன்னரே கார்த்திக் வீட்டிற்கு வந்துவிட்டான். ஞானசெல்வமும் அவனும் ஒன்றாக தான் வந்தனர். சிறிது நேரம் கழித்து சாப்பிடுவதாக சொன்ன கார்த்திக், நித்யாவிடம் கொஞ்சம் காபி போட்டு எடுத்து வரச் சொல்ல, அவளும் இருவருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுக்க, அதை இருவரும் குடித்து முடிக்கும் வரை,