(Reading time: 11 - 22 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

வர அனுமதி உண்டு.

முதல் நாள் அக்பர் மற்றும் ஜோதா ராணி இருவரும் பேசியதைக் கேட்டுக் கொண்டு இருந்த கிரண் தேவிக்கு அக்பரின் திட்டத்தை உடனடியாக ராணாவிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலானதாக இருந்தது.

ஜோதாவிடம் சித்திரம் தீட்டுபவளாகவே அறிமுகமாகியிருந்த கிரண் தேவி தன் தகவல்களையும் சித்திரமாகவே வரைந்து வைத்து இருந்தாள்.

மறுநாள் அதிகாலையிலேயே தயாராகி இருந்த கிரண் தேவி, நேராக ஜோதாவிடம் சென்றாள்.

“ராணி” என்று பணிவோடு அழைக்க,

“சொல் கிரண்” என்றாள் ஜோதா ராணி.

“ராணி, பதேபூரில் இன்றைக்குப் பெண்களுக்கு மட்டும் சந்தை நடக்கிறதாமே?”

“ஆம், அவர்கள் விழாவிற்கு வீட்டிற்கு அலங்காரம் செய்யவும், தங்களை அழகுப் படுத்திக் கொள்ளவும் பொருட்கள் வாங்க சந்தை போடப் படும்”

“நம் அரண்மனைப் பெண்களுக்கும் அனுமதி உண்டா ராணி?”

“உண்டே”

“எனில், நாங்கள் சென்று வரலாமா?” என்றுக் கேட்டாள் கிரண் தேவி.

சற்று யோசித்த ஜோதா ராணி “நாங்கள் என்றால் யார் யார்?” என்றுக் கேட்டாள்.

“என்னோடு சேர்த்து, நம் ராஜபுத்திரப் பெண்கள் அனைவருக்குமே அந்த ஆர்வம் இருக்கிறது ராணி”

“ஹ்ம்ம். சரி. தேவையானதை எடுத்து வைத்து விட்டுக் கிளம்புங்கள்” என்று உத்தரவு கொடுக்கவும், தன்னை மகிழ்ச்சியாகக் காட்டியபடி,

“மிக்க நன்றி ராணி” என்றவள், “தாங்கள் வரவில்லையா ராணி?” என்று வினவினாள்.

“பேரரசரின் ராணிகளுக்கு அதற்கு அனுமதி கிடையாது கிரண்” என்று பதில் கொடுத்த ஜோதா ராணி ,

“கிரண், அனைவரும் ஜாக்கிரதை” என்று அனுப்பி வைத்தாள்.

கிரண் அனுமதி கேட்டு வந்ததில் மகிழ்ந்த ஜோதா ராணியின் மற்ற ஆம்பர் பெண்களும் ஆவலோடு கிளம்பினர்.

அவர்கள் சென்ற உடன், தன் அரண்மனையின் காவல் தலைவனை அழைத்த ஜோதா ராணி,

“காவல் தலைவனே, நம் பெண்கள் வெளியே செல்கிறார்கள். நீயும், இன்னும் சிலரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.