அவர்கள் காமினியிடம் சொன்னதையே சொல்லவும், என்ன செய்யவென்று யோசித்தான்.
இப்போது ப்ர்திவிக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. என்ன செய்கிறாள்? எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லையே என்றுத் தவித்தான்.
ராணிக் கிரண் தேவியை அழைத்துக் கொண்டு சென்ற அந்தப் பெண், ஒரு மண்டபத்தின் அருகில் சென்றாள். குறிப்பிட்ட இடம் வந்ததும் ராணியை முன்னாடி விட்டு விட்டு, அருகில் இருந்த தூணில் இருந்த சிற்பத்தின் கையை லேசாகத் திருப்பினாள்.
உடனே ராணி கிரண் தேவி நின்று கொண்டு இருந்த இடம் வட்டமாகப் பிளக்கப் பட்டு அப்படியே உள்ளே சென்றாள்.
இயல்பிலேயே புத்திசாலியான கிரண் தேவி, தன்னைக் கடத்துகிறார்கள் என்று உணர்ந்து கத்த முற்பட்டாள். முடியாமல் போகவும், வேறு ஏதாவது அடையாளம் விட்டு வைக்க முடியாயமா என்றுப் பார்த்தாள். தன் வளையல்களை அந்த இடத்தில் சிதற அடித்தாள்.
பின் தன்னைத் தற்காத்து மொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் , யாராக இருக்கும் சென்று என்று அறிய முற்பட்டாள்.
அந்த வட்டவடிவக் கல் பிளந்து கொண்டதும், ராணி ஒரு சுரங்க நடைபாதை போன்ற இடத்தில் நின்று இருந்தாள். அந்த சுரங்கத்தினுள்ளும், ஆங்கங்கே தீப்பந்தங்கள் எரிய, அது செல்லும் பாதையில் செல்ல ஆரம்பித்தாள்.
முடிவில் ஒரு கதவு இருக்க, அதைத் திறந்து உள்ளே சென்ற போது அழகிய நிலா முற்றத்தோடு கூடிய அறை தென்பட்டது. சுற்றிலும் பார்வையை ஒட்டியவள், அங்கே நின்று கொண்டு இருந்தவரைப் பார்த்ததும் அதிர்ந்து நின்று விட்டாள்.
தொடரும்!