“என்ன சத்தம் அதிகமா இருக்கு?பெரியவங்கனு ஒரு மரியாதை இல்ல?அவன் ப்ரெண்ட் தான நீ..அப்பறம் எப்படியிருப்ப..இன்னொரு தடவை சத்தம் உயர்த்திப் பேசின நல்லாயிருக்காது சொல்லிட்டேன்.
கவனிச்சுட்டு தான் இருக்கேன்.ஒரு பேச்சுக்கு உன் வீடு மாதிரினு சொன்னா உன் வீடாவே மாத்திருவ போல..உன் இஷ்டத்துக்கு சுத்துற..எதோ எஜமானியம்மா மாதிரி நேத்து போய் கல்யாணி தம்பியை போய் பார்த்து விசாரிச்சுட்டு வந்துருக்க..”,எனும்போதே ஷியாமா கல்யாணியை முறைத்தாள்.
“அங்க என்ன முறைக்குற அவ சொல்லலனாலும் இங்க நடக்குறதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.இதோ பார்..நீ அவனோட ப்ரெண்ட் இந்த வீட்டோட விருந்தாளி அதை என்னைக்கும் மறந்துறாத..எப்படியிருந்தாலும் என் பொண்ணு தியா தான் இந்த வர்மா சாம்ராஜ்யத்தோட மூத்த மருமக..அதை மனசுல வச்சுக்கோ..”என்று அவர் முடிக்கவும் சிறியவர்கள் அங்கு வரவும் சரியாய் இருக்க தன்னருகில் வந்த தியாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறே தன் கையிலிருந்த பழரசத்தை சுவைத்துச் சென்றாள் ஷியாமா.
“எவ்வளவு திமிர் பார்தீங்களா..நான் இங்க இவ்ளோ கத்து கத்திட்டு இருக்கேன் காதுல வாங்குறாளானு பாருங்க..”
சற்று தூரம் சென்று திரும்பியவளின் பார்வை சர்வேஷை தீண்ட அவளையே முறைப்போடு பார்த்திருந்தார்.அவரைப் பார்த்தபடியே வந்தவள் எதிரில் வந்தவனின் மீது லேசாய் மோதி நிற்க வேகமாய் கையிலிருந்த டம்ளரை நகர்த்திப் பிடித்தாள்.
“கேர்புல்..”
“சாரி கவனிக்கல..”
“தட்ஸ் ஓகே ஆமா அங்கேயே சாப்பிடாமா எங்க எடுத்துட்டு போய்ட்டு இருக்க..”
“நத்திங்..சீக்கிரமாவே வந்துட்டேன்..வெளில போணும் டைம் ஆச்சு அதான்..”
“ஓ..ஓகே கிவ் மீ பைஃவ் மினிட்ஸ்..நானே ட்ராப் பண்றேன்..”
“அதெல்லாம் வேணாம்..நான் பாத்துக்குறேன்..ஆஷிக்கோட பைக் இருக்கே..”
“வில் கம் யூ வெயிட்”,என்றவன் சாப்பிட்டு மேஜை நோக்கிச் சென்றுவிட இடவலமாய் தலையசைத்தவளாய் தனதறைக்குச் சென்று தன் மொபைலையும் கண்ணாடியையும் எடுத்து வந்தாள்.
மகிழனோடு அவள் காரில் ஏறிய நேரம் சரியாய் சர்வேஷ் வாசல் அருகில் வர அவளைப் பார்த்தவளின் காதுகளில் புகை வராதது ஒன்று தான் குறையாய் இருந்தது.அதை மனதிற்குள்