“ஓ..சரி தேங்க் யூ மகிழன்..பார்க்கலாம் என்ன நடக்கும்னு..அண்ட் நாளைக்கு ஈவ்னிங் குள்ள அந்த சூரஜ் விஷயத்தை நான் கன்பார்ம் பண்றேன் உங்களுக்கு..”
“எதுவும் பிரச்சனை இல்லையே?!”
“அப்சொலியூட்லி நோ..ஐ வில் டேக் கேர்..”,என்றவள் கைக் குலுக்குவதற்காக கரம் நீட்டி நிற்க தன்னிருக்கையில் இருந்து எழுந்து நின்றவனாய் பதிலுக்கு கை நீட்டி குலுக்கி விடுவித்தான்.
“குட் நைட் மிஸ்டர் மகிழன்..ஹேவ் அ குட் ஸ்லீப்..”
“தேங்க் யூ யூ டூ”,என்றவன் கைகளை மார்பின் குறுக்கில் கட்டியவாறே வாசலை நோக்கிச் செல்லும் அவளையே பார்த்திருந்தான்.
மறுநாளின் பொழுது வழக்கம் போல் எதொவொரு முன்னடைவு இந்த விஷயத்தில் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்போடே விடிந்தது ஷியாமாவிற்கு.
கட்டிலை விட்டு இறங்கியவள் தனது அலமாரியைத் திறக்க எத்தனித்த நேரம் தரையில் இருந்த காகிதம் அவள் கண்ணில் பட்டது.என்னவாய் இருக்கும் என்ற சிந்தனையோடே அதை எடுத்தவள் தீருப்பிப் பார்க்க,
“தேவையில்லாம மகிழனோட நெருங்க நினைக்காத அது உனக்கு எப்பவுமே நல்லது இல்ல.வந்த வேலையில்லாம தேவையில்லாத எந்த வேலையும் செய்ய நினைக்காத..”
என்பதைப் படித்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டிருந்தது.அதை பத்திரமாய் எடுத்து மடித்து வைத்தவள் குளித்துத் தயாராகி கீழே சென்றாள்.பெரியவர்கள் அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க அப்போது தான் நேரத்தைப் பார்த்தவள் சற்று சீக்கீரமாகவே வந்து விட்டதை உணர்ந்து கொடண்டாள்.
இருந்தும் எதையும் வெளிக்காட்டாதவளாய் பொதுவாய் ஒரு குட் மார்னிங்கை கூறிவிட்டு அங்கிருந்த கண்ணாடி குவளையில் தனக்கான பழரசத்தை எடுத்துக் கொண்டு ஒரு தட்டில் இரண்டு பிரட் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர முற்பட்ட நேரம் சாந்தி தேவியின் கணவர் சர்வேஷ் சற்றே அதிகாரத் தொனியில்,
“அவனோட ஆபீஸ் ரூம்ல உனக்கென்ன வேலை?”,என்று கேட்க லேசாய் புருவம் சுருக்கியவளாய்,
“பேசுறதுக்கு விஷயம் இருந்தது பேச போனேன்..”
“அதான் அப்பப்போ லான்ல நின்னு பேசிட்டு இருக்கீங்களே!”
“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்..அங்கிள்..”,என்று ஆரம்பித்தவளுக்கு பொறுமை சுத்தமாய் காற்றில் பறந்திருந்தது.அதை உணார்ந்த சாந்தி தேவி அடக்கமாட்டாத கோபத்துடன்,