தொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவி
சட்டென்று முழித்துக் கொண்டாள் கிருத்திகா. செல்வத்தைப் பேருந்தில் கீழேத் தள்ளி விட்டு அவன் கழுத்தில் அவள் கத்தியைக் குறிப் பார்த்த நிகழ்வு நடந்த அன்று தான் கிருத்திகாவிற்கு கிரண் தேவி சம்பத்தப் பட்டக் காட்சிகள் கனவில் வரத் தொடங்கியது. கிட்டத்தட்ட இதே போன்ற சூழ்நிலை. காலங்கள் மட்டுமே வேறு என்று பல எண்ணங்கள் உள்ளே ஓடியது. நேரம் பார்த்தாள். அதிகாலையை நெருங்கிக் கொண்டு இருந்தது.
இதற்கு மேல் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. எழுந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு முதல் நாள் தன் பெரியப்பாவிடம் பேசியதை எண்ணிப் பார்த்தாள்.
அவள் பெரியப்பா பிரதாப்பும் , ப்ரித்வியும் சேர்ந்து கிருத்திகா தானாகவே செல்வத்தின் கடத்தலுக்கு வழி வகை செய்து கொடுப்பதைப் பற்றிச் சொன்னவர், இதில் அவளின் பொறுப்பு என்ன என்று எடுத்துச் சொல்லியிருந்தார்.
கிருத்திகாவிற்கு சிலக் கேள்விகள் இருந்தது. போனில் பேசியதால் பெரியப்பாவிடம் அதைக் கேட்க முடியவில்லை. எனவே ப்ரித்வியிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று நினைத்தாள்.
அதிகாலை தான் என்றாலும் அவள் அறிந்த வரையில் ப்ரித்விக்குச் சீக்கிரம் விழிக்கும் பழக்கம் உண்டு. தற்போது முழித்து இருந்தால் சென்றுப் பேசலாமே என்று அறையை விட்டு வெளியே வந்தாள்.
இவள் தங்கியிருந்த அறையைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த காரிடாரில் நின்றுக் கொண்டு இருந்தான் ப்ரித்வி. அவள் வியப்போடு அவனருகில் வர, ப்ரித்வியின் கலக்கமான முகமே அவள் கண்ணில் பட்டது.
“என்னாச்சு பாஸ்?” என்றாள்.
ப்ரித்வியோ “இந்த கடத்தல் பிளான் வேண்டாமோன்னு தோணுது கிருத்தி?” என்றான்.
“ஏன்?” என்று ஆச்சரியத்தோடு வினவினாள்.
“தெரியல கிருத்தி. என்னவோ தவறாப் போயிடுமோன்னு பயமா இருக்கு” என்றான்.
“நேத்திக்கு வரைக்கும் நீங்க அப்படி யோசிக்கலையே. எப்படியும் என்னைக் காப்பாற்றி அவங்களைப் பிடிச்சுடுவேன்னு சொல்லிட்டு இருந்தீங்க. திடீர்ன்னு என்ன ஆச்சு?”
“இப்போ எல்லாம் கிரண் தேவி பற்றியக் கனவுகள் எனக்கும் வர ஆரம்பிச்சு இருக்குன்னு சொன்னேன் இல்லையா?”
“ஆமாம்”
“அது எப்படின்னு யோசிச்சியா?”
அவள் யோச்னையோடு இல்லையெனத் தலையாட்டினாள்.
“அதைப் பற்றிப் பிறகு பேசலாம். இப்போ நேத்திக்கும் உனக்கு கனவு வந்துருக்குமே”