ப்ரித்வி சொல்ல ஆரம்பித்தான்.
கிரண் தேவி அக்பர் படைகள் பற்றிய விவரங்கள் கிடைத்து விட்டதை இளவரசன் பிரித்விராஜிடம் கூற நினைத்து, அவர்கள் இருவருக்குமான சந்திப்பை அந்த மீனா பஜாரில் வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தார்கள்.
இளவரசனுக்கு தாங்கள் கண்காணிக்கப் படுகிறோம் என்ற உணர்வு இருந்ததால், இந்தச் சந்திப்பு அவசியமா என்று சிந்தித்தான். ஆனால் ராம் சிங் கூறியது போல் எல்லாம் சரியாக நடந்தால் இங்கிருந்து ரானாவிடம் சென்று சேர இது ஒரு வாய்ப்பாக இருக்குமே என்ற எண்ணத்தில் தான் இந்த மீனா பஜார் என்ற இடத்திற்கு வந்தான்.
அங்கே ஆண்களுக்கு அனுமதியில்லை என்றவுடனேயே ப்ரித்விக்கு கலக்கமாகி விட்டது. என்ன செய்வது என்ற சிந்தித்தப் படியே அங்கேயே சற்றுத் தள்ளி காத்து இருந்தான்.
அவன் எண்ணம் சரியே போலே, காமினி மட்டும் தனியே வரவும், வேகமாகச் சென்று அவளிடம் விவரம் கேட்டான்.
காமினிக் கூறியதைக் கேட்டதும் திகைத்த இளவரசன், பின் காவலர்களிடம் பேசி கிரண் தேவியைக் கண்டுபிடிக்க வேண்டினான். அவர்களோ சற்றும் சலனம் கொள்ளாமல், காமினியிடம்
“பெண்ணே, உன்னோடு வந்த பெண்ணை ஒரு முதியவள் அழைத்துச் சென்றாளா? “ என்று வினவினர்.
காமினி ஆம் என,
“சரிதான். வீரனே நீ தேடும் பெண்ணை இனி நீ பார்க்க முடியாது” என்றுக் கூறவும், கோபம் கொண்ட இளவரசன்,
“என்ன சொல்கிறாய் காவலனே? நாங்கள் யார் தெரியுமா? உங்கள் பேரரசரின் அன்பிற்குப் பாத்தியப்பட்ட ராணி ஜோதாவின் அரண்மனையைச் சேர்ந்தவர்கள்” என்றுக் கூறினான்.
“வீரனே, அந்த பேரரசரின் அந்தப்புறத்திற்குத் தான் நீ தேடி வந்த பெண்ணும் சென்றிருக்க வேண்டும்” என்றுக் கூறவும், கோபத்தில் இளவரசன் தன் வாளை காவலனின் கழுத்தில் இறக்கினான்.
“நீ கூறியதற்கு அர்த்தம் என்ன?”
அவனின் வேகத்தைக் கண்டு மிரண்டிருந்த காவலர்கள்,
“இந்த மீனா பஜாருக்கு வந்தப் பெண்கள் காணவில்லை என்றால் பேரரசின் அந்தப் புறத்தில் தான் இருப்பார்கள். அவர்கள் இறப்புக் கூட அந்த அரண்மனைக்குள்ளேயே