அக்பரிடமிருந்து தப்பித்துச் சென்று இருந்தாள்.
அக்பர் ஜோதா ராணியைப் பார்க்க வந்து இருக்க, அவளின் பணியாளர்கள் அங்கே அங்கே நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து புருவம் சுழிக்க, உடன் அனைவரும் அங்கிருந்து காணமல் போயிருந்தான்ர்.
பின் ஜோதாவிடம் திரும்பி,
“என்ன ஆயிற்று ஜோதா ராணி? எல்லோரும் பேசிக் கொண்டுதானே இருந்தார்கள்? என வினவ, இதுதான் வாய்ப்பு என்று முழுகதையும் கூறினார்கள்.
இளவரசன் கவனமாக அவர்களின் நோக்கத்தை மாற்றி விட்டான். அக்பரோ சிறு நகையோடு அவனின் முயற்சிகளைப் பார்த்து இருந்தார்.
பின் “என் பிரிய ராணிக் கூறி அதை நான் மறுப்பேனா ? இதோ தற்போதே ஆணையிடுகிறேன். ராணி ஜோதாவின் பணிப் பெண்ணைத் தேடி அழைத்து வர உத்தரவிடுகிறேன்” என்றுக் கூறி விட்டுச் சென்றார்.
கிரண் தேவியைக் கண்டெடுத்து விடலாம் என்று எண்ணத்தில் அவளை மீண்டும் அந்த பஜார் இடங்களில் சென்றுத் தேடலானான் இளவசன்.
இந்த இடத்தில் நானும் எழுந்து விட்டேன் கிருத்தி. என் கனவிலும் , உன் கனவிலும் இருவருக்குமே கிரண் தேவிக் காப்பாற்றப்பட்டாளா எனத் தெரியவில்லை. எனவே தான் தற்போது இந்த முயற்சி தேவையா என்றுக் கலங்குகிறேன்” என்றான் ப்ரித்வி.
“ப்ரித்வி, எனக்கு ஒரு சில கேள்விகள் கேட்கலாமா?” என்றாள் கிருத்தி.
“கேள் கிருத்தி?”
“என் ஒருத்திக்காக அந்த செல்வத்தைச் சுற்றி வளைத்துப் பிடிக்கப் போகிறீர்களா?
“ஹ்ம்ம். இல்லை. உன் மூலமாக பிடிக்கப் போகிறோமே தவிர, உனக்காக அல்ல”
“அதன் காரணம் அறியலாமா?”
“செல்வம் , உன்னிடம் வம்பு செய்து விட்டு அதற்காக மட்டும் ஊரை விட்டு வரவில்லை. அவன் மிகப் பெரிய போதைப் பொருள் விற்பனையாளர். செல்வத்தின் அப்பா இதை ரகசியமாக்கி , உங்கள் குடும்பத்திற்குப் பயப்படுவது போல் ஏற்பாடு செய்துள்ளார்’”
“ஒஹ்.. எப்படிக் கண்டுபிடித்தனர்?’
“செல்வத்தின் அப்பா மேல் ஏற்கனவே புகார்கள் நிறைய இருந்ததால், அவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் பட்டுக் கொண்டுதான் இருந்தது. அன்றைக்கு செல்வம் உன்னிடம் அடிவாங்கிய விஷயம் எல்லாம் சீக்ரெட் ஆபீசர்ஸ் வரை சென்று விட்டது. அதனால் அவனின் மேலும் உளவுத்துறை கண் வைத்ததில் நிறைய விஷயங்கள் கிடைத்துள்ளன. ஆபீசர்ஸ் கட்டளையின் பேரில் தான் இன்ஸ்பெக்டர், நான் , உன் பெரியப்பா எல்லோருமே செயல்படுகிறோம்”
“அப்படி என்றால் நானும் உறுதியாக இந்த வேலையில் பங்கேற்கிறேன்”
“ஹ்ம்ம். சரி. என்றாலும் கவனமாக இரு. இப்போது எல்லோரும் வரத் தொடங்கி விட்டார்கள். இனி அதிகம் உன் பக்கம் வர முடியாது. உனக்கு தேவையான கட்டளைகள் கொடுக்கப் படும் . அதன் படி நடந்து கொள். கவனம்” என்று எச்சரித்து விட்டுச் சென்று விட்டான் ப்ரித்வி.
தொடரும்!