(Reading time: 11 - 21 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“உங்களுக்கும் வந்ததா?”

“ஆமாம். அதைப் பற்றிச் சொல்லு” என்றான்.

இருவருக்கும் ஒன்றாகத் தானே காட்சிகள் தோன்றி இருக்கும். அதை ஏன் திரும்பக் கேட்கிறார் என்று யோசித்தாள். பின் ப்ரித்வி கேட்பதைச் சொல்லி விடலாம் என்று முழுதும் சொன்னாள். கேட்டதும் ப்ரித்வி,

“அப்போ அந்த சுரங்கப் பாதையில் சிக்கி, அக்பரின் அரண்மனைக்குள் சென்று அவரிடம் பிடிபட்டு விட்டாயா?”

“பிடிபட்டு விட்டாயா என்றுக் கேட்கிறீர்கள்? பிடிப் பட்டது கிரண் தேவி தானே”

“ஆம். “ என்றவன் யோசனையோடு “கிரண் தேவி அக்பரை வீழ்த்தியதற்குப் பின் ஒன்றும் நடக்கவில்லையா? அவர் அவர்களை அப்படியே விட்டு விட்டாரா?” என்றுக் கேட்டான்.

“அதைப் பற்றித் தெரியவில்லை ப்ரித்வி. அதற்குள் எனக்கு முழிப்பு வந்து விட்டது. அதை விட இதே போன்ற செயல் மூலம் தான் எனக்கு கிரண் தேவி பற்றியக் கனவுகள் வர ஆரம்பித்தது என்ற சிந்தனையில் அதற்குப் பிறகு தூங்கவில்லை.”

“ஹ்ம்ம் . அப்படி என்றால் இன்றைக்கு உன்னை செல்வம் கும்பலைச்  சேர்ந்தவர்கள் கடத்தினால் நீ அவர்களிடம் சிக்கிக் கொள்வாய் என்றுத் தோன்றுகிறது”

“எப்படிச் சொல்கிறீர்கள் ப்ரித்வி?’

“இதுவரை உனக்கு கனவில் தோன்றும் அனைத்துமே தற்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. அதன்படித் தான் கூறுகிறேன்”

“ஒஹ். அப்படியே என்றாலும் நீங்கள் தான் தகுந்த ஏற்பாடுகள் செய்து இருக்கிறீர்களே? பிறகு என்ன ?”

“எனக்கு அதில் தான் சந்தேகமே?”

என்ன என்பது போல் பார்க்க,

“உனக்குக்  கனவில் கிரண் தேவி சம்பத்தப் பட்டக் காட்சிகள் வந்தது என்றால், எனக்கு இளவரசன் ப்ரித்விராஜ் சம்பந்தப் பட்டக் காட்சிகள் வந்தன” என்றுக் கூற, தற்போது கிருத்தி அதிசயமாய்ப் பார்த்தாள்.

“அது எப்படி?” என்றுக் கேட்க,

“ஹ்ம்ம். கிரண் தேவியாக உனக்கும், இளவரசனாக எனக்கும் இந்தக் கனவுகள் ஏதோ உணர்த்துகிறதோ என்று எண்ணுகிறேன்”

“அப்படி என்றால், உங்கள் கனவில் என்ன நடந்தது?’

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.