வில்லையே.... கமல்(பார்வதியின் மகன்)
அப்படி என்னடா ஜூனியர் அதில் ராஜ தந்திரம்...
அதுவா பா அண்ணி அக்காஸ் அத்தைஸ் எல்லா வேலையும் முடிச்சிடாங்க நாம்ப கொண்டுப் போய் டேபிலில் அடுக்க வேண்டியது தான் பாக்கீ... அது மட்டும் இல்லாமல் நாம எந்த வேலையும் செய்யவில்லை என்று நியூ பாரத் நாரீஸ் யாரும் சொல்ல முடியதே.... -நக்ஷ்.
அடடே... மாப்பிள்ளை இதில் இப்படி ஒரு மகா ராஜ தந்திரம் இருப்பது தெரியாமல் போனதே... அருள்.
சரி சரி ராஜாத்திகளா போய் ப்ரெஷ் ஆகி வாங்க என்று அனப்பி வைத்தார் தாத்தா...
பின் ஆண்கள் கலத்தில் இரங்கி சீரியசாக வேலை செய்துக் கொண்டு இருந்தனர்.
மெல்லிய குரலில் தாத்தா, ஏன்டா ஆதி நீ இதுமாதிரி வேலையெல்லாம் இது வரை எப்போதடா செய்து இருக்கிறாய்... என்று சாப்பிட தட்டுகளை வருசையாக அமர்ந்து சாப்பிட ஏதுவாக அடுக்கிக் கொண்டிருந்த ஆதியிடம் கேட்டார்.
நீங்க மட்டும் என்னவாம் என்றார் ஆதி அவரை பார்காமலே சிரித்தவாறு... (ஏன் என்றால் தாத்தா அதிக்கு பின்னால் அவர் வைக்கும் தட்டிர்கு பக்கத்தில் ஸ்பூன்களையல்லவா வைத்துக் கொண்டே வருகிரார்....)
ஹா ஹா ஹா... என்று டம்லரை வைத்தபடி அவரகளைத் துடர்ந்து வந்த கமல் சிரித்து விட்டார்.
பதார்தங்களைப்பார்ததும் ஈஷ்வர் கொஞ்சம் பயந்துகூட விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்....
ஈஷ்வர் நக்ஷ்ஷுடன் பௌவ்வின் 5அண்ணன்களும் 2 சத்தப்பாக்களும் கொண்டு வந்து அடுக்கினர் 10 நடையில்....
*****
அறை மணிநேரத்தில் பெண்களின் குழு ஒவ்வொருவராக வர ஆறம்பித்தனர்.
வந்தவர்கள் அனைவரும் குலித்துவிட்டு எலிமையாக உடுத்தி இருந்தனர். பெரியவர்கள் பருத்தி ஆடைகலில் பட்டு வேலைப்பாடுகல் செய்யப்பட்ட புடவையும் சுடிதாரும் அணிந்து வர வீட்டு மருமகள்கள் கம்படபுல் டாப்ஸ் ஸ்கர்ட்ஸ்சுடன் வந்தனர். . .
மனைவிமார்களை கனவன்மார்கள் சைட் அடிக்க நக்ஷ் யாரையும் பாகுபாடு பாறாமல் கலாய்த்தபடி இருக்க ஈஷ்வர் சந்ரீஷ்சுடன் ஏதோ பேசியபடி அனைவரையும் வேடிக்கை பார்த்தான்... இந்த நேரத்தில் நிவி யாருடனோ பேசும் சத்தம் கேட்டது.
என்ன சத்தம் என்று பார்த்தால் நிவி அந்த அழு மூஞ்சியை சாபிட அழைத்து வந்தாள்.