திறந்தான்...
ஓஓஓஓஓ.... கல்யணம் செய்துக்கிட்டாரா? ரொம்ப சந்தோஷம் இங்க இருக்கவங்கல கலங்க வச்சிட்டு அவருக்கு கல்யாணமா... ரொம்ப சந்தோஷம். என்று பௌவ்வை நிமிர்ந்து பார்த்தான்.
(இதை கேல்விப் பட்டு தான் நீயும் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாயா என்ற கேல்வி அவன் பார்வையில் இருக்க அவளே கண்கலங்கிப்போய் அமர்ந்து இருந்தாள்.)
ராகுல் எங்க என்று மிருத்துன் கேட்க அவர் யூகே ல இருக்கார்டா என்ற பதில பரமூவிடம் இருந்து வந்தது...
ஓஓஓஓஓ முறை பசங்களை பிடித்து கட்டி வச்சிடாங்கலா இவங்கலாம் சேர்ந்து என்று யோசித்தபடி அவன் இருக்க.... அவர்களும் இல்லை என்பது அவர் அவர்கள் ஜோடியுடனே வந்திருப்பதில் தெரிந்தது.
உன் அண்ணி உனக்கு ஓக்கேவானு பார்த்து சொல்லு மிருத்துன் என்று பரமூ கேட்க என் அம்மூ அக்கா இருக்க வேண்டிய இடத்தில் யாரும் எனக்கு ஓக்கே கிடையாது என்று நினைத்தபடி அது வழபோரவங்க முடிவு பன்னவேண்டியது பரமூனா என்றபடி நகர்ந்து விட்டான்.
அனைவரும் குழப்பமாக பார்க்க சிரித்தபடி நின்ற பௌவ்.,
சஞ்சூ..... என்று அழைத்தாள்.
சடன் ப்ரேக் போட்டவண் போல் நின்றான் அவன்...
நீ உன் அண்ணியை பார்க்கலனா பரவாயில்லை என் கணவரை பார்த்துச் சொல் எனறது தான் எங்க அம்மூகா எங்க? நான் அவரைப்பார்கனும் என்று அவள் கையைப் பிடித்து குழந்தையாய் அடம் பிடித்தான்.
பார்த்து என்ன செய்ய போர சஞ்சூ?
உன் கணவன் மட்டும் இல்லை உன் மாமனார், மாமியார், கொழுந்தனார், நாத்தனார் எல்லாரையும் பார்க்கனும் என் அம்மூ அக்கா பத்திரம்னு சொல்லனும்..., யாருக்கும் என்ன தவம் செய்தாலும் கிடைக்காத வரம் அவங்களுக்கு கிடைத்து இருகிறதுனு சொல்வேன். உனக்கு என்னைப்போல ஒரு கொழுந்தன் இருந்தால் அவனிடம் சொல்லனும் உனக்கு அண்ணியில்லை அம்மாவாக இருந்துப் பார்ப்பாங்க உன்னைனு சொல்வேன்... உங்களை மாமானார் மாமியாராக இல்லாமல் அப்பா அம்மாவக வச்சி பாத்துப்பாங்கனு சொல்லனும்...
அப்படியா....
ம்ம்ம்ம்ம் ஆமாம்
அப்ப சரி... அதோ அங்கப்பார், அவ தான் என் ஓரவத்தி என்று நிவியை கான்பித்தாள் ...