நிவி வணக்கம் என்றாள் பாவனையாக.
அவங்க எல்லாம் என் நார்தனார் என்று தன் அண்ணிகளைக் காடடினாள்.
பார்த்த அவனுக்கு ஒரு ஹாய் கிடைத்தது பதிலாக.
என் மாமனார் மாமியார் என்று கமலையும் கணியையும் காண்பித்தாள்
அடடே தம்பி நல்லா இருக்கீங்கலா என்றார் கமல்....
தாத்தா சொன்ன ஒரே வார்தைக்காக எனக்கு தாலிக் கட்டிய என் கணவர் என்று ஈஷ்வரைக் காண்பிக்க நடப்பதை நம்ப முடியாமல் கண்களை திறந்து திறந்து மூடியவனிடம்...
அப்பரம் இவர் தான் என் அழுமூஞ்சி குட்டிப் பையன் என்று கண்ணாடியில் அவனையே காட்ட.... முகம் நிறைந்த சிரிப்பில் மகிழ்சியால் திக்கு முக்காடி போனான். சிறு கேப்பில் நடப்பதையும் புரிந்துக் கொண்டான்.
ஒரே தவ்வில் அனைத்துக் கொண்டான் அவன் இரண்டாம் அண்னையவலை...
சஞ்சு ஏன்டா இப்படி அழர அசிங்கமா! !!! உன் சீனியர் அக்கா அப்பரம் உங்கமேம் எல்லாம் பார்க்ராங்கடா....
இவர்களின் உரையாடல் தாயும் குழந்தையும் பேசுவது போல் தான் தோன்றியது அனைவருக்கும்
அவள் புடவையை எடுத்து முகத்தை வேகமாக துடைத்தவன் நக்ஷ்ஷின் முதுகில் ஒரு அடியைப் போட்டு எதையும் முழுசா சொல்லமாட்டாயா டா என்றான் கோவமாக...
டேய் நான் சொல்ல ரெடி தான் நீ கேட்க ரெடியா இருந்தியா?
ஓஓஓஓ சரி சரி... இப்ப எனக்கு எல்லாமே தெரிஞ்சிக்கனும் முழுசா....
சரி வா சொல்ரேன்...
இல்ல இல்ல இப்ப இல்ல .... அப்பரமா.
ஏன்டா நீ தானே என்னை அடித்தாய் இப்பவே தான் சோல்வேன்.
நான் நிவிய என் கூட ஊருக்கு கூட்டிப்போகலாம்னு நினைகிரேன்...
டேய் பாவி நான் என்னடா பாவம் பன்னேன் ... ஆல விடுடா சாமி நீ எப்ப கேட்க தயாரோ அப்ப கேலு சொல்ரேன்.
அது அந்தபயம் என்று நக்ஷை மிரட்டியவன் இப்போது பரமூ, கமல், சந்தீஷ், சரவனேஷ், நித்ரேஷ் அனைவரையும் அனைத்து தன் சந்தோஷத்தை பகிந்துக் கொண்டான்.
கமலின் மனைவி கண்மணி மிருதுன்னின் சீனியர் எனவே அவள் அவனை நன்கு அறிவாள்... அவன் துறுதுறு மாணவன் தான் ஆனால் அவன் மனநிலையை அப்படியே முகத்தில்