மேல ஃப்ரீ டைம் கிடைச்சது. அதான் இந்த ஃப்ளான் போட்டுட்டேன். அவனோட கெஸ்ட் ஹவுஸ் பீச் வியூ பார்த்தா போல இருக்கும், கொஞ்ச நேரம் ஜாலியா வாக் போயிட்டு வரலாம்," என்று அவன் திட்டத்தை கூறவும்,
"என்னது பீச்சா?" என்ற அவளது கேள்வியில் குழந்தையின் ஆர்வம் தெரிந்தது.
சும்மா கடற்கறை என்று சொன்னதற்கே இத்தனை குதூகலமா? என்று அவன் நினைக்க, அங்கு சென்றபின் தான் அவளின் குதூகலத்திற்கு காரணம் தெரிந்தது. இரவு உணவிற்குப் பின் கொஞ்சம் காலார நடக்கலாம் என்று சொல்ல, அவளோ கடற்கரையை பார்த்ததும் விளையாட ஆரம்பித்துவிட்டாள்.
தேனிலவின் போதே அவள் இப்படி கடற்கரையில் விளையாடியிருக்கிறாள் தான், ஆனால் அது பொது இடம் என்பது மட்டுமின்றி, கார்த்திக்கிடமும் ஆரம்பத்தில் அவள் கொஞ்சம் விலகல் தன்மையில் இருந்ததால் அன்று அடக்கி வாசித்தாள். ஆனால் இந்த யாருமில்லா தனிமை அவளுக்கு வசதியாக போய்விட, அவள் போட்ட ஆட்டத்தில்,
"நித்தி உனக்கு பீச்க்கு போக ரொம்ப பிடிக்குமா?" என்று அவன் கேட்க,
"பீச்சே இல்லாத ஊரில் வளர்ந்தவ, அப்படியிருக்க பீச்சை பார்த்தா விளையாட தோனாம இருக்குமா? எனக்கு பீச் ரொம்ப பிடிக்கும் மாமா. உங்களுக்கு ஞாபகமிருக்கான்னு தெரியல, முதல்முறை கல்யாணத்தை பத்தி பேச என்னை நீங்க அழைச்சிட்டு போனதே பீச்க்கு தான், அதுதான் முதல்முறை நான் பீச்சை பார்ப்பதும் கூட, நீங்க என்னை தண்ணிக்கிட்ட கூட்டிட்டுப் போவீங்களான்னு கூட நான் எதிர்பார்த்தேன் தெரியுமா?" என்ற அவளது பதிலில்,
"அப்போ நீயா கேட்கிறதுக்கு என்ன?" என்று அவன் கேட்டான்.
"அப்போ ரொம்பவே தயக்கமா இருந்துச்சு, அதான் இப்போ கூட்டுட்டு வந்துட்டீங்களே, அப்புறம் என்ன? இப்போ நீங்க நடந்ததுக்கு ஃபீல் செய்யாம, ஜாலியா என்னோடு விளையாடுங்க," என்று கொஞ்சம் அலை குறைவாக வரும் இடத்தில் நின்றவனை இழுத்துச் சென்றாள்.
அதிகநேரம் அவளுடனான நெருக்கம் கார்த்திக்கை உணர்ச்சிவசப்பட வைத்திருக்க, இதில் அறை வரைக்குமே அவனது கைவளைவில் அவனோடு நெருக்கமாக நடந்துக் கொண்டு வந்தவளை வாசத்தை உணர்ந்தவன், தன் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவளைவிட்டு அவன் விலகி நிற்க பார்க்க,
"இப்போ கூட ஏன் மாமா இப்படி?" என்று அவள் கேட்டாள்.
"இல்ல நித்தி, படிக்கிற நேரத்தில் உன்னோட மனசை அலைபாய விடக் கூடாதுடா?" என்று அவன் பதில் கூற,
"கல்யாணத்துக்குப் பிறகு எத்தனையோ இரவு நமக்கு இப்படி தான் இருந்திருக்கு, அதனால