பிஸ்னஸ்ல உங்களால கவனம் செலுத்த முடியாம போச்சா?" என்று அவள் கேள்விக் கேட்டாள்.
"ம்ம் என்னோட டென்ஷன்ல்லாம் உன்னோட இருக்கும்போது நீங்கிடும் தெரியுமா?" என்று அவன் கூற,
"அதுபோல தான் இதுவும், என்னோட மனசுல உறுதியோட நான் நல்லா படிக்கணும்னு நினைக்கும் போது, இயல்பான இந்த கணவன், மனைவிக்குள்ள உண்டாகும் நெருக்கம் ஏன் மனசை அலைபாய விடப்போகுது. அதுவும் இப்போ லீவ் தானே, குழந்தை உண்டாகாம நம்ம கவனமா இருக்கப் போறோம், அப்புறம் ஏன் மாமா இப்படி நீங்க ஒதுங்கிப் போறீங்க, இப்படி கல்யாணமான பின்னும் உங்களோட உணர்ச்சிகளை அடக்கணும்னு என்ன இருக்கு?" என்ற அவளது விளக்கம் அவனது தயக்கத்திற்கு விடுதலையை கொடுக்க, இதுபோல் இன்னொரு இன்பமான இரவு இருக்க முடியுமா? என்பது போல் அந்த இரவு அவர்களின் கூடலில் நீண்டுக் கொண்டே சென்றது.
தொடரும்..