(Reading time: 7 - 13 minutes)
Kaarigai
Kaarigai

அதுக்கு அப்பறம் தேவைப்பட்டா நீங்க வாங்க" என்றவள் அவள் அறைக்கு சென்றாள்.

அவள் உள்ளே போகும் வரை காத்திருந்தவர் சத்யாவின் புறம் திரும்பினார். "சத்யா" அவரின் குரலில் அதுவரை குனிந்தபடி சாப்பிட்டு கொண்டிருந்த சத்யா, நிமிர்ந்து பார்த்தான்.

"என்னாச்சு சத்யா? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையாப்பா?" கேட்டவரிடம் "இல்லையேம்மா ஏன் என்னாச்சு திடிர்னு கேக்கறீங்க?" அவனின் பதிலில் அவருக்கு குழப்பம் அதிகரித்தது.

"ஐயோ என்ன சத்யா, இப்படி இருக்க? பவி ஏதோ பிரச்சனைன்னு சொல்றா… நீ என்னடான்னா எனக்கென்ன வந்ததுன்னு உக்காந்துட்டு இருக்க… என்னதான் உன் பிரச்சனை???? இப்படி இருந்தா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி தான் " லக்ஷ்மிக்கு சத்யா மேல் வந்த கோவத்தில் முகம் சிவந்திருந்தது.

"அம்மா நீங்க ஏதோ டென்ஷன்ல என்னை திட்டாதிங்க அவளுக்கு பிரச்சனைனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அவ என்கிட்டே ஹெல்ப் கேட்டு நான் பண்ணலைனா நீங்க திட்டறதுல அர்த்தம் இருக்கு. நீங்க கேட்டதுக்கே அவ தான் அவளே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாளே… அப்பறம் ஏன் என்னை திட்டறீங்க?" சத்யாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை லட்சுமி. அவனுக்கு பதில் சொல்ல வாயை திறக்க, அதே சமயம் பவித்ரா அறைக்குள் இருந்து வெளியே வர அவர் அமைதியானார்

"அம்மா நான் போயிட்டு வந்துடறேன்"பவித்ரா சொல்லவும், "பவிம்மா நானும் வரேண்டா… நீ ஏன் தனியா போற? அதுவும் வக்கீல் நோட்டீஸ் எல்லாம் உனக்கு தெரியுமா? " இவனை நம்பி உபயோகம் இல்லை என லட்சுமி சத்யாவை முறைத்தபடி கேட்க, "இல்லைம்மா நான் போயி பாக்கறேன். எனக்கு நோட்டீஸ் பத்தி எல்லாம் தெரியாது ஆனா அடலீஸ்ட் அதோட காப்பியாவது எடுத்துட்டு வரேன் மா. அப்பறம் தான் யோசிக்கணும் " பவித்ரா சொல்ல, "சரி இரும்மா சத்யாகிட்ட காருல கொண்டு வந்து விட சொல்றேன்" என்றவர் அவன் புறம் திரும்பினார்.

சாப்பிட்டு கொண்டிருந்தவனை கண்டு அவருக்கு கோவம் தலைக்கேறியது "இவனை……"பல்லை கடித்தவர் "சத்யா, பவித்ராவை கூட்டிட்டு போயிட்டு வா" என்றவரை இடையிட்டாள் பவித்ரா.

"இல்லைம்மா நான் ஆட்டோ புடிச்சு போயிக்கிறேன்" எனவும் "ஏன் வீட்டுல நான் சொல்றதை யாரும் கேக்க மாட்டிங்களா? நீ உக்காரு அவன் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல கிளம்பி வருவான் " என்றவரை அதற்க்கு மேல் எதுவும் எதிர்த்து பேசாமல் அமைதியாக சத்யாவை பார்த்தாள் பவித்ரா.

"சத்யா போயி டிரஸ் மாத்திட்டு வா " நீ சாப்பிட்டது போதும் என மறைமுகமாக சொல்பவரை பார்த்தவன் எழுந்து சென்று கை கழுவி விட்டு வந்து எதுவும் பேசாமல் வெளியே செல்ல , அவனுக்கு தன்னுடன் வருவதில் விருப்பமில்லை போல என்று எண்ணியபடி அவன் பின்னே சென்றாள் பவித்ரா

இருவரும் செல்வதை பார்த்தபடி தலையில் கை வைத்து அமர்ந்தார் லட்சுமி

Episode # 10

Episode # 12

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.