“இந்தத் தாளாளர் மட்டும் அப்படின்னா போதும் சக்தி... ஆனா மொத்த நெட்வொர்க்கும் பிடிக்க நமக்கு அந்த லேப்ல என்ன நடக்குதுன்னு முழுசா தெரியணும்.... இந்த தாளாளர் ஒரு ஒரு வேலைக்கும் தனிதனி குரூப் ஆளுங்க வச்சிருக்கான்.... ஒருத்தன் செய்யற வேலை அடுத்தவனுக்கு தெரிய மாட்டேங்குது...”
“இந்த டாக்டர்ஸ் தூக்கினா மாதிரி அந்த லேப்ல வேலை செய்யுற விஞ்ஞானிகளையும் தூக்கிட்டா என்ன....”
“என்ன சக்தி சும்மா டம்பிள்ஸ் தூக்கறா மாதிரி அசால்ட்டா சொல்லிட்ட... மருத்துவமனைல நமக்கு டாக்டர்ஸ் யாருன்னு தெரியும்... அப்படியுமே எல்லா பிளானும் அமல்படுத்த நமக்கு எத்தனை நாள் ஆச்சு.... இங்க அந்த லேப்க்கு போறவங்க யாருன்னு கூட தெரியாது....”
ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் சந்தோஷும், சந்தியாவும் இவர்கள் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்தார்கள்...
“மதி சார்... அது யார் யாருன்னு எனக்கு தெரியும்...”, சந்தியா சொல்ல சக்தியும், சந்தோஷும் அவளை “சொல்லவே இல்லை” என்ற பார்வை பார்த்தார்கள்....
“ஹிஹிஹி சாரி சந்தோஷ்... இன்னைக்கு அந்த மணி மேட்டர்ல அலைஞ்சதுல இதை சொல்ல மறந்துட்டேன்...”
“சந்தியா சந்தோஷை அப்பறமா சமாளி.... மொதல்ல ஆளுங்க யாருன்னு சொல்லு....”, மதி கேட்க சந்தியா அவர்களின் பெயர்களை சொல்ல பெயர்களை கேட்ட மூவரும் அதிர்ந்தார்கள்....
“ஹே சந்தியா... நல்லா தெரியுமா இவங்கதான்னு... நீ சொல்ற ஒரு ஒருத்தரும் இந்த சமுதாயத்துல உயரிய நிலைல இருக்கறவங்க... சந்தேகத்தின் பேருல சும்மாலாம் அவங்களை கைது பண்ணி விசாரிக்க முடியாது....”
“நல்லாத் தெரியும் மதி சார்... இதுல ரெண்டு பேர் உள்ள போகும்போது நானே என் கண்ணால பார்த்தேன்... மூணாவது ஆள் அவங்க பேசும்போது சொன்னதை வச்சு சொன்னேன்....”
“ஹ்ம்ம் அவங்கதான்னு நிரூபிக்க நமக்கு வலிமையான ஆதாரம் வேணும்... சும்மா பார்த்ததை வச்சு சொல்ல முடியாது...”
“மதி சார்.... டாக்டர்களை பண்ணினா மாதிரி இவங்களையும் தூக்கிட்டு வந்துட வேண்டியதுதான்...”
“அது அத்தனை சுலபமில்லை சந்தியா.... அவங்களுக்கு பாதுகாப்பு அதிகம்... ஸோ ஆதாரத்தை வச்சு கைது பண்ணலாம்.... சந்தேகத்தின் பேரில் கைதோ, இல்லை கடத்தலோ சாத்தியமே இல்லை....”